சிவகங்கை, மே 17- சிவகங்கை மாவட்டம் மானா மதுரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜனனி பிளஸ்-2 பொதுத்தேர்வில் 492 மதிப்பெண் கள் எடுத்துள்ளார். அரசுப் பள்ளி களில் மாவட்ட அளவில் முதன்மை பெற்றுள்ளார். தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், மாணவி ஜனனியின் வீட்டிற்குச் சென்று ரூ.50 ஆயிரம் நிதியை நேரில் வழங்கி, பாராட்டி வாழ்த்தி னார். திமுக நகர்செயலாளர் பொன் னுச்சாமி ,திமுக ஒன்றிய செய லாளர்கள் ராஜாமணி ,அண்ணா துரை,நகர் அவைத்தலைவர் ரவி, மானாமதுரை ஊராட்சி ஒன்றி யக்குழு பெருந்தலைவர் லதா அண்ணாத்துரை ஆகியோர் உடன் சென்றனர். பல்வேறு அர சியல் அமைப்புகள் மாணவியை சந்தித்து வாழ்த்துக்களை தெரி வித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரபாண்டி, ஒன்றிய செயலாளர் ஆண்டி, மானா மதுரை நகர் மன்ற தலைவர் மாரியப்பன்கென்னடி, துணைத் தலைவர் பாலசுந்தரம் ஆகியோர் நேரில் வாழ்த்துக்களை தெரி வித்தனர்.