districts

img

293 மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கினார் அமைச்சர் பி.மூர்த்தி

மதுரை, ஜூன் 11- மதுரை யா.ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்  நிலைப்பள்ளியில் திங்க ளன்று நடைபெற்ற விழாவில் வணிகவரி மற்றும் பதி வுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி மதுரை கிழக்கு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று  10,11,12-ஆம் வகுப்பு அரசுப்  பொதுத்தேர்வுகளில் அதிக  மதிப்பெண் பெற்ற மாணவ,  மாணவியர்களை ஊக்கு விக்கும் வகையில் தமது சொந்த  நிதியிலிருந்து 46 பள்ளி களைச் சேர்ந்த 293 மாணவ,  மாணவிகளுக்கு மிதிவண்டி களை வழங்கினார். விழாவில் பேசிய அமைச்  சர் பி.மூர்த்தி, “ஒவ்வொரு ஆண்டும் இதேபோல மிதி வண்டிகள் வழங்கப்படும். யா.ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்  பள்ளியில் கூடுதல் வகுப்ப றைக் கட்டடங்கள் தேவை யென கோரிக்கை வைத்துள்  ளார்கள். நபார்டு திட்டத்தின் கீழ் இப்பள்ளியில் புதிதாக  பத்து கூடுதல் வகுப்பறை  கட்டடங்கள் கட்டுவதற்கு நட வடிக்கை மேற்கொள்ளப் படும் என்றார்.  இவ்விழாவில், மாவட்ட முதன்மைக்கல்வி அலு வலர் கார்த்திகா, கிழக்கு ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மணிமேகலை உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.