தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களின் 98-வது பிறந்த நாளை முன்னிட்டு ஜூலை 11 திங்களன்று சிவகங்கை மாவட்டம், குன்றக்குடியில் உள்ள அவரது மணி மண்டபத்தில் அன்னாரது உருவச் சிலைக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் குன்றக்குடி ஆதீனம் தவத்திரு பொன்னம்பல அடிகளார், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் மருதுபாண்டி உட்பட பலர் உள்ளனர்.