தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்று, ஈராண்டு நிறைவடைந்ததையொட்டி, அதனை சிறப்பிக்கின்ற வகையில், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மே 6 அன்று தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 365 பயனாளிகளுக்கு ரூ.1,59,93,372- மதிப்பீட்டில் பல்வேறு வகை நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தார். மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் சிவககங்கை நகர்மன்ற தலைவர் துரைஆனந்த், திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், நகர்மன்றத் துணைத்தலைவர் .கார்கண்ணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் செந்தில்குமார் மற்றும் ஆரோக்கிய சாந்தாராணி, காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.