districts

img

கலைஞர் நினைவு நூலகத்தில் பழங்கால ஓலைச்சுவடிகளை காட்சிப்படுத்த ஏற்பாடு

மதுரை, ஏப்.7-   மதுரை புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறையின் மூலம் கட்டப்பட்டு வரும் “முத்தமிழறி ஞர் கலைஞர் நினைவு நூலகம்“  கட்டிடத்தின் கட்டுமானப் பணிக ளை ஏப்ரல் 7 வெள்ளிக்கிழமை யன்று  பொதுப்பணித்துறை  அமைச்சர் எ.வ.வேலு , வணிக வரி-பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி,  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய் யாமொழி ஆகியோர் நேரில் பார் வையிட்டு ஆய்வு மேற்கொண்ட னர்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு கூறுகை யில், தென் மாவட்டங்களில் இருக்கின்ற ஆய்வாளர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள், ஆரம்பப் பள்ளியில் படிக்கின்ற பள்ளிக்குழந்தைகள், பொது மக்கள் என அனைவருக்கும் இந்நூலகம் பயன்பட வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு அரசின் சார்பாக  “முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகம்“ அமைக்கப்பட்டுள்ளது. இந்நூல கத்தில் தமிழ் புத்தகங்கள் 1 லட் சத்து 70 ஆயிரம் எண்ணிக்கையி லும் ஆங்கில புத்தகங்கள் 2 லட் சத்து 75 ஆயிரம் எண்ணிக்கையி லும் இ-புத்தகங்கள் 6 ஆயிரம் எண்ணிக்கையிலும் வைப்பதற்கு  திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில்  பழங்கால ஓலைச்சுவடிகள்  காட்சிப் படுத்தப்படுவதைப் போன்று, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகத்திலும் பழங்கால ஓலைச் சுவடிகளை  படிக்க வருகின்றவர்க ளுக்கு காட்சிப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நூலகத்தின்  கட்டுமான பணிகள் ஏறத்தாழ நிறைவ டைந்துள்ளன. வருகின்ற ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் நூறு சதவீதப் பணிகள் நிறைவேற்றப்படும்.

அதன்பின்பு  தமிழ்நாடு முதலமைச் சரின் இசைவினைப் பெற்று, தேதி உறுதி செய்யப்பட்டு முத்தமிழ றிஞர் கலைஞர் நினைவு நூலகம் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்படும்.  வருகின்ற மே 5-ஆம் தேதிக்கு மேல் நூலகத்தில் புத்தகங்கள் காட்சிப்படுத்துவதற்கு வேண்டிய பணிகளை நூலகத் துறையின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இப்பணிகளையெல்லாம் ஒட்டு மொத்தமாக ஊக்குவிப்பதற்கா கவும், விரைந்து செயல்படுத்து வதற்காகவும் இன்றைய தினம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், கல்லூரி மாணவ, மாணவி யர்கள், பள்ளிக் குழந்தைகள் இ-லைப்ரேரியில் படிப்பதை விரும்புவதை கருத்திற்கொண்டு இந்நூலகத்தில் இ-லைப்ரேரியும் இயங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. என்று தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ். அனீஷ் சேகர், சட்டமன்ற உறுப்பி னர்கள் கோ.தளபதி (மதுரை வடக்கு), ஆ.வெங்கடேசன் (சோழ வந்தான்), மு.பூமிநாதன் (மதுரை  தெற்கு)  மற்றும் பொதுப்பணித் துறை உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.