districts

img

பாதுகாப்புத் தளத்தில் இடைவிடாத முயற்சிகள்: ஊழியர்களுக்கு அமைச்சர் அஜய் பட் பாராட்டு

சென்னை, செப். 6 சென்னை ஆவடியில் உள்ள போர்த் தளவாடம் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறு வனத்தை ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் அஜய் பட் பார்வையிட்டார். ஒன்றிய பாதுகாப்பு மற்றும்  சுற்றுலாத்துறை இணை அமைச்சர் அஜய் பட் ஆவடியில் உள்ள போர்த் தளவாடம் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (சிவிஆர்டிஇ) தனது முதல் பயணத்தை மேற் கொண்டார். அப்போது அமைச்சர் மூத்த  அறிவியலாளர்களுடன் கலந் துரையாடினார். மேலும்  சி.வி.ஆர்.டி.இ.யில் நடைபெற்று வரும் திட்டங்கள், முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார். சிவிஆர்டிஇ-யின் சாதனை கள் மற்றும் முக்கிய தொழில் நுட்பம், தயாரிப்புகள் குறித்த சிறப்பு அறிவியலாளர் மற்றும் இயக்குநர் ஜெனரல் டாக்டர் எஸ்.வி.காடே விளக்கமளித்தார். சிவிஆர்டிஇ இயக்குநர் பாலமுருகன், தற்போதைய நிலை மற்றும் நடைபெற்று வரும் திட்டங்களின் மேம்பாடுகள் குறித்து விளக்கினார். மேலும் அந்தந்த திட்டத் தலை வர்கள், அவற்றின் அமைப்புகள்  தனித்துவத்தை எடுத்துரைத்த னர். அமைச்சர் குழு உறுப்பினர் களுடன் பிரதான போர் டாங்கிகள்  (அர்ஜுன் எம்.கே-ஏ) பயணம் செய்தார். பின்னர் பேசிய அமைச்சர், “பாதுகாப்புத் தளத்தில் இடைவிடாத முயற்சிகள் மற்றும்  பங்களிப்புகளுக்காக ஊழியர் களை பாராட்டினார். மேலும்  ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு  அமைப்புகளில் தற்சார்பை  அதிகரிப்பதன் முக்கியத்து வத்தை வலியுறுத்திய அவர்,  ‘மேக் இன் இந்தியா’ கருத்தாக்கத் தின் மூலம் டி.ஆர்.டி.ஓ. தேசத்தை  வலுப்படுத்தும் என்றும் கூறினார்.