districts

img

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம்

மதுரை, மே 3-  மதுரை சித்திரை திருவிழாவின்  தேரோட்டம் மே 3 புதனன்று நடை பெற்றது. இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.   கீழ மாசி வீதியில் துவங்கிய தேரோட்டம், தெற்கு மாசி வதி, மேல  மாசி வீதி, வடக்கு மாசி வீதி வழியாக  வலம் வந்து மீண்டும் கீழ மாசி வீதியை வந்தடைந்தது. சித்திரை திருவிழாவின் 11 ஆவது நாளான மே -3 ஆம் தேதி  நடைபெற்ற தேரோட்டத்துடன் மீனாட்சி  அம்மன் கோவிலில் நடக்கும் சித்திரை  திருவிழா நிறைவு பெற்றது. தேரோட் டத்தை காணவந்த மக்களுக்கு பல் வேறு அமைப்புகள், நிறுவனங்கள் சார்பில் நீர்மோர் மற்றும் உணவுகள் வழங்கப்பட்டன.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மத்திய - 2 ஆம் பகுதிக் குழுவின் தோழர் பூச்சி நினைவு படிப்பகம் சார்பில் வடக்குமாசி-மேலமாசி வீதி சந்திப்பில் தியாகி லீலா வதி நினைவு நீர்மோர் பந்தல் அமைக்  கப்பட்டு, தேரோட்டத்தை காணவந்த மக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாவட்டச் செயலாளர் மா. கணேசன், துணை மேயர் டி. நாகராஜன், மாவட்ட  செயற்குழு உறுப்பினர் அ. ரமேஷ்,  பகு திக்குழு செயலாளர் பி. ஜீவா ஆகி யோர் தொடங்கி வைத்தனர். இதில் மாவட்டக்குழு உறுப்பினர் பி. கோபி நாத், பகுதிக்குழு உறுப்பினர்கள் ஜீவ கலா, இ. உதயநாதன், கிளைச் செயலா ளர் சிங்காரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.  மதுரை சித்திரை திருவிழா தேரோட்டத்தில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், மதுரை மாநகராட்சி துணை மேயர் டி. நாக ராஜன் ஆகியோர் மக்களுடன் கலந்து கொண்டு நடந்து வந்தனர்.

படங்கள்: பொன்மாறன்