districts

ஆவின் நிறுவனத்தில் பால் கொள்முதல் - வினியோகத்தை முறைப்படுத்துக!

மதுரை, நவ.18- ஆவின் நிறுவனத்தில் பால் கொள் முதல் மற்றும் வினியோகத்தை முறைப்  படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மதுரை மாநகர், புறநகர் மாவட்டக்குழுவின் செயலாளர்கள் மா.கணேசன் , கே. ராஜேந்திரன் ஆகியோர் கூட்டாக விடுத்த அறிக்கை வருமாறு:  ஏழை, எளிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் அத்தியாவசிய பொருளான பால் தேவை என்பது ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. பாலின் தேவையை உணர்ந்து யுனிசெப் நிறுவனத்தால் 1967 ஆம் ஆண்டு மதுரை பால் திட்டம்  என்ற பெயரில் முதன்முதலில் துவங் கப்பட்டது. பின்னர் 1974 முதல் தமிழ்  நாடு பால்பண்ணை மேம்பாட்டு துறை யின் கீழ் கொண்டு வரப்பட்டது . 1982  முதல் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்படி பதிவு பெற்ற கூட்டுறவு நிறு வனமாக ஆவின் பால்பண்ணை செயல்  பட்டு வருகிறது. மதுரை , தேனி மாவட்  டங்களை எல்லையாக கொண்டு செயல்  பட்ட மதுரை ஆவின் தற்போது மதுரை  மாவட்டத்தில் மட்டும் செயல்படுகிறது.  பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் கொள்முதல் செய்து நுகர்வோருக்கு வழங்கி வரும் ஆவின்  நிறுவனம். தனியார் பால் நிறுவனங்க ளின் மிகப்பெரிய போட்டியாளராக விளங்கி வருகிறது . இதனால் வெளிச்  சந்தையில் பாலின் விலை கட்டுக்குள்  இருக்கிறது. இத்தகைய சிறப்புக்களை  கொண்ட மதுரை ஆவினில் சமீப காலங் களில் பல்வேறு பிரச்சனைகள் முன்னுக்கு வந்துள்ளன.  மதுரை ஆவினில் நாள் ஒன்றுக்கு சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர்  வரை பால் கொள்முதல் செய்யப்பட்டு  வந்தது. தற்போது அது நாள் ஒன்றுக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் லிட்டராக குறைந்துள்ளது. கொள்முதல் குறைந்ததின் விளைவு பால் இருப்பை பராமரிக்க இயலாத நிலையும் ஏற்  பட்டுள்ளது. இதன்காரணமாக தினசரி  கொள்முதல் செய்த பால், ஆவின் நிறு வனத்திற்கு வந்த பிறகே பதப்படுத்தும் பணியினை தொடங்க வேண்டியுள்ளது. உரிய நேரத்திற்கு நுகர்வோருக்கு பால்  அனுப்ப இயலாத நிலைமை ஏற்படு கிறது. நுகர்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர் . நுகர்வோரில் ஒருபகு தியினர் தனியார் உற்பத்தி செய்யும்  பாலினை வாங்கும் நிலை ஏற்படுகிறது.  இதனால் நுகர்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

ஆவின் நிறுவனத்தில் பால் கொள்  முதல் குறைவதன் மூலமாக நுகர்வோ ரின் தேவையை நிவர்த்தி செய்யமுடி யாத நிலைமை ஏற்பட்டுள்ளது . இத னால் ஆவின் பால் வாங்கும் கடைக்கா ரர்களுக்கு வழங்கப்படும் பால் அளவு  குறைக்கப்படுவதாக தெரிகிறது. கடைக்  காரர்களை பொறுத்தவரை பால் வினி யோகம் சீராக கிடைக்காதபட்சத்தில் தனியார் கொள்முதலுக்கு மாறும் சூழல்  ஏற்படும். மீண்டும் அவர்களை ஆவின் நுகர்வோராக மாற்றுவது மிகக் கடின மாகும்.  அதேபோல் ஆவின் நெய் , வெண்  ணெய் ஆகியவற்றின் உற்பத்தியும் கடு மையாக பாதிக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது . இந்நிலை தொடர்ந்தால் ஆவின் நிறுவனத்திற்கு பெரும் பின்ன டைவு ஏற்படும். இதனால் டெப்போ வைத்து பால் வியாபாரம் செய்யும் முக வர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும். எனவே பால் கொள்முதல் குறைவ தற்கான காரணங்களை கண்டறிந்து உடனடியாக சரி செய்ய வேண்டியது அவசியமாகும்.  தமிழக அரசு பால் உற்பத்தியாளர் களுக்கு கட்டுப்படியான விலை கிடைப்  பதற்கு ஆவின் நிறுவனங்களுக்கு மானி யங்களை வழங்குவதற்கு முன்வர வேண்டும். மேலும் , அத்தியாவசிய உணவுப் பொருளாகிய பாலை உற்பத்தி செய்  தும், வினியோகித்தும் ஆவின் நிறு வனம் சிறப்பாக இயங்குவதற்கு அதன் பணியாளர்கள் பங்களிப்பு மிக முக்கிய மானதாகும். மதுரை ஆவின் நிறுவனத்தில் முன்னுக்கு வந்துள்ள தொழிலா ளர்களின் நீண்ட நாள் கோரிக்கை களான ஆவின் பணியாளர்களுக்கு கொடுக்க வேண்டிய 240 நாள் ஈட்டிய விடுப்பு ஊதியம் , 6 வது ஊதியக்குழு பரிந்துரை தகுதி உள்ள அனைத்து பணியாளர்களுக்கும் வழங்கிட , 90 நாள் ஈட்டா விடுப்பு வழங்கிட , கேண்டினை ஆவின் நிர்வாகமே ஏற்று நடத்திட , கொரோனா சிறப்பு ஊதியத்தை உட னடியாக வழங்கிட, நிறுத்தி வைக்கப் பட்டுள்ள பதவி உயர்வு . ஓய்வுகால பலன்களை உடனடியாக வழங்கிட, ஒப்பந்தம் முறையை கைவிட்டு நிரந்தர தொழிலாளர்களை பணி அமர்த்திட, குறைந்தபட்சம் கூவி கிடைத்திட , பி.எப்., இ.எஸ்.ஐ. உறுதிப்படுத்திட மாவட்ட நிர்வாகம் , தமிழக அரசு உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.