districts

img

மாதவிடாய் குறித்த கல்வியும் அறிவியலும்...

இந்துத்துவா பழங்கதை

மாதவிடாய் ஒரு சங்கடமான, வெளிப்  படையாகப் பேச முடியாத விஷயம் என  பெரும்பாலான பெண்களாலும்கூட கருதப்படுகிறது. இந்தியாவின் பல  பகுதிகளில் இந்துத்துவா நடைமுறை யில் , மாதவிடாய் இன்னும் அருவருக்கத்  தக்க அழுக்கு மற்றும் தூய்மையற்றதாக வும் கருதப்படுகிறது. இந்த கட்டுக்கதை யின் தோற்றம் இந்திரன் பிராமணர்களை கொன்றதில் இணைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் ஒரு  பிராமணரைக் கொன்ற குற்றமானது மாத விடாய் ஓட்டமாக தோன்றும் என்று வேதத்  தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்துத் துவா பற்றிய ஆய்வு கருத்துக்கள் கூறு கின்றன. மேலும், இந்து மத நம்பிக்கையில்,  மாதவிடாய் காலத்தில் பெண்கள் இயல்  பான வாழ்க்கை தடைசெய்யப்பட்டுள் ளது. இன்றளவும் பெரும்பாலான கிரா மங்களில் சிறுநகரங்களில் அவர்கள் மாத விடாய் நாட்களில் சமையலறைக்குள்  பூஜை அறைக்குள் நுழையக்கூடாது என்  பதற்கும் பெண்கள் புனித புத்தகங்களை தொடுவதற்கும் தடை உள்ளது. காடிப்புளிப்பெடுத்த இந்துத்துவா கூறுகளால் கட்டுப்படுத்தப்பட்ட ஆணா திக்க சமூகம் பெண்களுக்கு முடிவில்லாத  கட்டுப்பாடுகளை விதிக்கும் என்பதற் கான வாழ்வியல் உண்மைகள்தான் இவை. சபரிமலை உட்பட இந்தியா முழு வதும் உள்ள பெரும்பாலான இந்து கோயில்களின் உள்வளாகத்திற்குள் கூட இன்றளவும் பெண்கள் நுழைய முடி யாத கட்டுப்பாடுகளும் இதன் காரணமா கவே உருவாக்கப்பட்டுள்ளன.

தி கிரேட் இண்டியன் கிச்சன்

இந்துத்துவாவின் பெண்ணடிமைத் தனத்தை அம்பலப்படுத்தும் ஒரு காத்தி ரமான திரை ஓவியம்தான் கேரள இயக்கு நர் ஜியோ பேபியின் ‘தி கிரேட் இண்டி யன் கிச்சன்’. திருமண முழு அலங்கா ரத்தில் மகிழ்ச்சியும் பெருமையும் நாண மும் பொங்கி வழிய தனது கணவன் வீட்  டுக்குள் குத்து விளக்குடன் காலடி எடுத்து வைக்கும் இளம் பட்டதாரி மனைவி  (நிமிஷா சஜயன் ). ​​மாதவிடாய் குறித்த கணவனது குடும்ப நம்பிக்கைகள் மிகவும் பிற்போக்குத்தனமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறாள். முடிவில்  சகிக்கமுடியாத இந்துமத பிற்போக்கு ஆணாதிக்க கணவன் மற்றும் மாம னார் கொடுமைகளுக்கு எதிராக வெகுண்  டெழுந்து அந்நரக வாழ்க்கையை தூக்கி  எறிந்து விட்டு வெளியேறுகிறாள். நிலம்  அதிர நடந்தே தான் பிறந்த வீட்டிற்கு திரும்புகிறாள்.  தான் விரும்பும் சுதந்திர வாழ்க்கைக் கும் மாறுகிறாள். மாதந்தோறும் மாத விடாயை சந்திக்கும் ஒரு பெண் தாயாக, மகளாக, மனைவியாக, சகோதரி யாக ஏதோ ஒரு இந்திய தேசிய இனத்தைச்  சேர்ந்த அவள் யாராகட்டும் ஜியோ பேபி யின் தி கிரேட் இண்டின் கிச்சன் திரைப்  படத்தை அவசியம் பார்க்க வேண்டும். 

உலக சராசரியைவிட இந்தியாவில் இருமடங்கு

இப்போது ஹோமியோபதி மருத்துவ  தீர்வுகளுக்குள் வருவோம். உலகளவில்  300 மில்லியனுக்கும் அதிகமான பெண் கள் எந்த ஒரு நாளிலும், மாதவிடாயில் உள்ளனர் என தகவல்கள் கூறுகின்றன. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி,  உலகின் கர்ப்பப்பை வாய்ப் புற்று நோய் இறப்புகளில் 27 சதவிகிதம் இந்தி யாவில் உள்ளது. உலக சராசரியை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு இந்நிகழ்வு விகிதம் அதிகமாக உள்ளதற்கு இந்திய  அறியாமையும் பலவீனமான மாதவிடாய்  சுகாதாரமும் இந்த சோகத்திற்கு ஒரு முக்  கிய காரணம் என நிபுணர்கள் கருதுகின்ற னர். பருவமடைதல் மற்றும் மாதவிடாய் பற்றிய அறிவியல் கல்வியானது சமூ கத்தில் நிலவும் தடைகளை அகற்றுகிறது.  எனவே இது குறித்த எதிர்மறையான அணுகுமுறைகளை எதிர்கொள்ள ஒரு முழுமையான மாற்று அணுகுமுறையும் புதுமையான உத்தியும் இன்று நமக்குத் தேவைப்படுகிறது. பருவமடைதல் என்பது ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கை யில் ஒரு அற்புதமான காலமாகும். இது  அவள் உடல் ஆரோக்கியமாக இருப்ப தையும், தனது உடலிலிருந்து தான் ஒரு முழு பெண்ணாக மாறுவதை உணரும் அருமையான அனுபவத்தையும் மாத விடாய் அளிக்கிறது. பலருக்கு இது மிக வும் குழப்பமான நேரமாகவும் இருக்கக் கூடும். பல கேள்விகள் கவலைகள் உங்க ளுக்கோ அல்லது உங்கள் மகளுக்கோ சகோதரிக்கோ எழக்கூடும். உங்களுக் குத் தெரிய வராத சந்தேகங்களும் உரு வாகக்கூடும். ஹோமியோபதி இதற்கு தெளிவான நீண்ட பயனுள்ள தீர்வைத் தருகிறது.  நமது சமூகத்தில் மாதவிடாய் பிரச்ச னைகளை தீர்க்கிறேன் என போலி மருத்து வர்கள் ஏராளமானோர் கிளம்பி உள்ள னர். தகுதிவாய்ந்த மருத்துவரை தேர்வு செய்வதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். இளம் பெண்களுக்கு பொது வாக நான்கு மாதவிடாய் பிரச்சனைகள் ஏற்படலாம்.

ஒழுங்கற்ற மாதவிடாய்கள் (Irregular Periods)

மாதவிடாய் தொடங்கிய முதல் இரண்டு ஆண்டுகளில் ஒழுங்கற்ற இரத் தப் போக்கு ஏற்படுவது பொதுவானது. மாதவிடாய் மிகவும் ஒழுங்கற்றதாக இருந்தால் அல்லது மூன்று மாதங்க ளுக்கு மேல் இடைவெளியில் இருந்தால்  மருத்துவரைப் பார்ப்பது அவசியம். பல்சட்டிலா ஜோனேசியா அசோகா கோசி பியம் டிரில்லியம் பெண்ட் செபியா நாட்  முர் போன்ற ஹோமியோபதி மருந்துகள்  உள்ளன. ஹோமியோ மருத்துவரின் வழி காட்டுதலில் மட்டுமே மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

கடுமையான மாதவிடாய்  (Heavy Periods)

கடுமையான மற்றும் அதிக இரத்தப்  போக்கிற்கு உடனே மருத்துவர் ஆலோ சனை கவனிப்பு உடன தேவைப்படு கிறது. மருத்துவச் சொற்களில், மாதவிடா யின்போது அதிகப்படியான இரத்தப் போக்கு மற்றும் ஒரு வாரத்திற்கும் மேலாக நீடித்தால் மெனோராஜியா என்று குறிப்பிடப்படுகின்றது மெனோராஜி யாவை ஹோமியோபதி மருந்துகளால் பக்க விளைவுகள் இன்றி குணப்படுத்த முடியும். இதற்கு சிறந்த ஹோமியோபதி மருந்து சபீனா சீனா மற்றும் போராக்ஸ் பெல்லடோனா கால்கேரியா கார்ப் ஆகும். இரத்தப்போக்கு அதிகமாகவும் நீண்ட காலமாகவும் இருக்கும் போது இந்த ஹோமியோபதி தீர்வு மிகவும் பய னுள்ளதாக இருக்கும். 

வலிமிகுந்த மாதவிடாய்  (Painful Periods)

மாதவிடாய் காலத்தில் புரோஸ் டாக்லாண்டின் வெளியிடப்படுகிறது இது ஒரு ஹார்மோன் ஆகும். இது வலி மிகுந்த கருப்பை சுருக்கங்களை ஏற்  படுத்தலாம். கெமோமில்லா. … சிமிசிஃபுகா (ஆக்டேயா ரேஸ்மோசா என்றும் அழைக்கப்படுகிறது) ..கொக்கு லஸ். ..மக்னீசியா பாஸ்போரிகா. ... போவிஸ்டா. ...கலோபில்லம் லிக்ட்ராய்டு கள்...கொலோசைந்திஸ் போன்ற மருந்து களைக் கொண்டு இதற்கு சிகிச்சை அளிக்க முடியும். இதுபோன்ற சமயங்களில் பெண்கள் மருத்துவரை அணுக வேண்டும்.

முகப்பரு (Acne)

ஒழுங்கற்ற மாதவிடாய், குறைவான அல்லது அதிக மாதவிடாய், முகமுடி, எடை அதிகரிப்பு, முடி உதிர்தல், பிற அறி குறிகளுடன் முகப்பருவை ஏற்படுத்த லாம். கருத்தடை மாத்திரைகள், ஸ்டீராய்டுகளை உட்கொள்வதால் முகப்  பரு தூண்டப்படலாம். ஹார்மோன் சம நிலையின்மையால் ஏற்படும் முகப்பருக் கான சிறந்த ஹோமியோபதி மருந்துகள் செபியா - யூஜினியா கிராஃபைட்ஸ் சொரினம் பல்சட்டிலா ஹெப்பர் சல்ப் சிலிசியா காளி புரோமாட்டம்.

எல்லாம் நம் கையில்...

மாதவிடாய் பிரச்சனைகளுக்கான ஆய்வு மற்றும் சிகிச்சைக்கான மருந்தி யல்துறை அமோக லாபம் கொழிக்கும்  பன்னாட்டு நிறுவனமயமாக்கப்பட்டுள் ளது. நிரந்தர நோயாளியாக ஒரு  பெண்ணை மாற்றும் கோர உலக மயத்தின் லாப வேட்டை இதற்குள் உள்  ளது. எளிமையான முறையில் அதிகம் செலவில்லாத ஹோமியோ சிகிச்சைகள் உங்கள் எதிரே ஏராளம் உள்ளன. மருத்து வரிடம் ஆலோசித்து உங்கள் வாழ்வியல்  முறையில் மாற்றத்தை கொண்டு வாருங்கள்.  உடற்பயிற்சிகள் ஆண்களுக்கு மட்டும் தனிச்சொத்து அல்ல. பெண் களுக்கும் தேவை. பெண்கள் அவர்கள் எந்த வயதிலும் தினசரி அரைமணி நேரம்  சைக்கிள் ஓட்டலாம். மாதவிடாய் மற்றும்  கருப்பை பிரச்சனைகளை சைக்கிள் பயிற்சி வெகுவாக குறைக்கிறது என்பதை  மருத்துவ கூர்நோக்கில் (Clinical  observation) நாங்கள் கவனித்துள் ளோம். சராசரி 45 கிலோ எடைக்குள்ளி ருக்கும் இளம் பெண்கள், மாணவிகள்  ஸ்கிப்பிங் ரோப் பயிற்சிகளை படிப்படி யாக தினசரி மேற்கொள்ளலாம். சராசரி  எடையுள்ள மணமானவர்கள், 25 வய திற்கும் மேற்பட்டோர் ஹோமியோ  மருத்துவர் பரிந்துரையோடு பிசியோ தெரபிஸ்ட் ஆலோசனையோடுதான் மேற்கொள்ள வேண்டும். எல்லாம் நம்கை யில்.. மாதவிடாய் சுகாதார மேலாண்மை யை அனைவருக்கும் கற்பிப்போம். நோயின்றி வாழ்வில் முன்னேறுவோம்.