districts

img

தூக்குமேடை தியாகி பாலு பிறந்த ஊரில் நினைவு தின நிகழ்ச்சி

மதுரை, பிப்.23- மதுரை மாவட்டம் உசி லம்பட்டி வட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் கருகப் பிள்ளை கிராமத்தில் பிறந்தவர் பாலுச்சாமி என்ற  தூக்குமேடை தியாகி பாலு அவர்கள்.  தூக்குமேடை தியாகி பாலு வின்  69 ஆவது நினைவு தின  நிகழ்ச்சி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி செல்லம்பட்டி  ஒன்றி யக்குழு சார்பில் அவரது பிறந்த ஊரான கருகப்பிள்ளையில் செவ்வாயன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர்  வி.பி.முருகன் தலை மை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் பி.எஸ்.முத்துப் பாண்டி, ஒன்றியக்குழு உறுப்பி னர் டி.சிவனம்மாள், கிளைச் செய லாளர் அ.கணேசன் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டு  மரி யாதை செலுத்தினர்.