districts

img

வ.புதுப்பட்டி பேரூராட்சித் தலைவர் மீது உறுப்பினர்கள் புகார்

விருதுநகர், மே 29- விருதுநகர் மாவட்டம், வ.புதுப்பட்டி பேரூராட்சித் தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அங்கீ கரிக்க வேண்டுமென உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்துள்ளனர். வ.புதுப்பட்டி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டு கள் உள்ளன. இதில் தலைவராக சுப்புலட்சுமி உள்ளார்.  பேரூராட்சியில் டென்டர் விடப்பட்ட பணிகள் நடைபெற வில்லை. முறையாக வரவு செலவு காண்பிப்பதில்லை. மன்ற கோப்புகளில் வெற்றுக் கையெழுத்து வாங்கு கின்றார். இதுகுறித்து கேள்வி எழுப்பினால் பதில் கூற  மறுத்து வருகிறார். கடந்த மே.26-ஆம் தேதி நடைபெற்ற  பேரூராட்சிக் கூட்டத்தில் பங்கேற்காமல் ஒன்பது உறுப்பி னர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் நிiவேற்றியுள்ளோம். அதை அங்கீகரிக்க வேண்டும் எனபேரூராட்சி துணைத் தலைவர் சுதா, உறுப்பினர்கள் சித்ரா (2), வள்ளி (4), வின்சென்ட்ராஜ் (5), பொன்னையன் (8), வேலுச்சாமி (9),  மீனா(10), ஆனந்தராஜ்(15), பீட்டர் (6) ஆகியோர் திங்க ளன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

;