நாகர்கோவில், மார்ச் 28- கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநக ராட்சியின் முதல் கூட்டம் திங்களன்று (மார்ச் 28) நடை பெற்றது. மாநகர அரங்கில் நடந்த கூட்டத்திற்கு மேயர் ரெ. மகேஷ் தலைமை வகித்தார். துணை மேயர் மேரி பிரின்ஸ், மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் மற்றும் நாகர்கோவில் மாநகராட்சியின் 52 வார்டுகளின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த மேயர் கூறியதாவது: இந்த கூட்டத்தில் மாநகர மக்க ளின் அடிப்படை தேவைகளை முன்வைத்து ரூ.11 கோடிக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, இதில் மக்களின் உடனடி தேவையான தெருவிளக்கு மற்றும் தண்ணீர் வrதிகளை உள்ளடக்கியவை. ஏற்கனவே மாநகர தண்ணீர் குழாய் பதிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ஒப்பந்ததாரருக்கு மாநக ராட்சி சார்பில் 3 முறை நோட்டீஸ் அனுப்பபட்டது பதிலளிக்காத காரணத்தினால் புதிய ஒப்பந்ததாரர் நியமிக்கப்படவுள்ளார். மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் கமாண்ட் ஆண்டு காண்ட்ரோல் முறை யில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்திட ரூ.75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநகராடசியில் மொத்தம் 85 ஆயிரம் தண்ணீர் குழாய்கள் பதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் இது வரை 35 ஆயிரம் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன மீத முள்ள வேளைகள் வரும் மே இறுதிக்குள் முடிவடை யும் இதனால் மாநகர மக்களுக்கு தண்ணீர் தினமும் கிடைக்கும். புதிதாக மாநகராட்சிக்குள் இணைக்கப் பட்ட 50,51,52 ஆகிய வார்டுகளுக்கும் அம்ரூத் குடிநீர் திட்டம் நடைமுறை படுத்தப்படும், மேலும் மாநகராட்சி யில் மொத்தம் 53 பூங்காக்கள் இருக்கும் நிலையில் தற்போது 8 பூங்காக்களை முதற்கட்டமாக சீரமைக்கும் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.