மதுரை, ஜூன் 19- மதுரை மாநகராட்சி, ஒவ்வொரு வார்டி லும் மாமன்ற உறுப்பினர்களுக்கான அலு வலகங்கள் அமைத்துத் தரப்படும் மேயர் இந்திராணி தெரிவித்தார். 92, 95, 97, 99 மற்றும் 100 ஆகிய வார்டு களை உள்ளடக்கிய மண்டலம் 5- இல் மாநகராட்சி ஆணையர் கே.ஜே.பிரவீன் குமார், மூத்த அதிகாரிகள் மற்றும் வார்டு உறுப்பினர்களுடன் சனிக்கிழமை நடத்திய ஆய்வின்போது, அனைத்து வார்டுகளிலும் மாமன்ற உறுப்பினர்களுக் கான அலுவலகம் அமைக்கப்பட உள்ளது என்றார். அலுவலகங்கள் அமைக்கப்படுவதன் மூலம், மக்கள் தங்கள் வார்டுகளில் உள்ள மாமன்ற உறுப்பினர்களை அணுகி, மக்கள் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளலாம். பழைய வார்டுகளில் உறுப்பினர் களுக்கு அலுவலகம் ஒதுக்கப்பட்டதாக வும், இணைக்கப்பட்ட வார்டுகளில் அவ் வாறு இல்லை என்றும் அதிகாரிகள் தெரி வித்தனர். பட்டியல் தயாரிக்கப்பட்டு. அலு வலகம் இல்லாத வார்டுகளுக்கு அலுவல கம் கட்டப்படும். இடம் தேர்வு செய்யப்பட்ட பின் அதற்கான நிதி ஒதுக்கப்படும் என் றார். விரைவில் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், நிலையூர் கண்மாயை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு மேயர் உத்தர விட்டார். அவனியாபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகா தார நிலைய ஊழியர்கள் கூறுகையில், “இருக்கைகள் குறைவாக உள்ளதால், வெளிநோயாளிகள் காத்திருக்க வேண்டி யுள்ளது. கூடுதல் இருக்கைகள் வழங்கு வதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு ஆணையாளர் உத்தரவிட்டார். தெருவிளக்குகள் எரியாதது மற்றும் காலி மனைகளில் புதர் மண்டி கிடப்ப தால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாக சௌபாக்யா நகர் மக்கள் புகார் தெரிவித்த னர். புதர்களை அகற்றி, மனைகளை சுத்த மாக வைத்திருக்க, மனைகளின் உரிமை யாளர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் வழங்கும் என மேயர் தெரிவித்தார். விமான நிலையத்திற்குச் செல்லும் பாதையில் தெற்கு வாசல் வழியாக அவனி யாபுரம் நுழைவு வாயில் வரை வைக் கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளை இட மாற்றம் செய்ய வேண்டியதன் அவசி யத்தை மேயர் சுட்டிக்காட்டினார். இதற் கான மாற்று வழிமுறைகளை ஆய்வு செய்யுமாறு மாநகராட்சி சுகாதார அலு வலரை ஆணையர் கேட்டுக் கொண்டார்.
திருப்பரங்குன்றம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள உயர் மின் விளக்கு அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி திருப்பரங்குன்றம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். மாநக ராட்சி சமூகப் பொறுப்புணர்வு முயற்சியாக அந்த இடத்தை சுத்தம் செய்து அழகு படுத்தும் என்றார். சன்னதி தெரு முதல் காசிவிஸ்வநாதர் மலைக்கோவில் வரையிலான 1.5 கி.மீ., ஆக்கிரமிப்புகளை அகற்றி, பக்தர்கள் செல்வதற்காக அதிக இடவசதி செய்து தரப்படும் என்றார் ஆணையர். அதிகாரிகள் வந்ததையொட்டி ஒரு சில இடங்கள் சுத்தம் செய்யப்பட்டு ப்ளீச்சிங் பவுடர் போடப்பட்டிருந்தது. அப்போது திருப்பரங்குன்றம் பேருந்து நிலை யம் அருகே சாக்கடை நிரம்பி சாலை யில் ஓடிக்கொண்டிருந்தது. அதை சுத்தம் செய்யாமல் சாலையில் ஓடிய சாக்கடை யை சுற்றி ப்ளீச்சிங் பவுடர் மூலம் வரை படம் போல மூடப்பட்டிருந்தது. மேலும் சாலையில் ஓடும் சாக்கடை யை சுத்தம் செய்யச் சொல்லி அங்கிருந்த பெண் ஒருவர் அதிகாரிகளிடம் ஆவேச மாக முறையிட்டார்.