மதுரை, மே 2- 137 ஆவது மே தினத்தை முன்னிட்டு சிஐடியு,ஏஐடியுசி சார்பில் மதுரை ஆரப் பாளையம் கிராஸ்ரோட்டில் திங்களன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. சோழவந்தா னில் சிஐடியு சார்பில் மே தினப் பேரணி- பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.லெனின் தலைமை வகித்தார். ஏஐ டியுசி மாவட்டச் செயலாளர் கே. சேது முன்னிலை வகித்தார். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் கண்ணகி ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் ஜே. லூர்து ரூபி, ஏஐடியுசி தேசியக்குழு உறுப்பினர் எம். நந்தாசிங், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஜெ. மூர்த்தி, அரசு பணியாளர் சங்க மாவட்டச் செயலாளர் இரா.ஜெயகணேஷ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்ட துணைத்தலைவர் எஸ். சந்தியாகு நன்றி கூறினார். கூட்டத்தில் துணை மேயர் தி. நாக ராஜன், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சி. சுப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். முன்னதாக போக்குவரத்து கலை வாணர் கலைக்குழு மற்றும் விடியல் சிறப்பு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது
சோழவந்தானில் பேரணி
இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) மதுரை புறநகர் மாவட்டக்குழு சார்பில் சோழவந்தானில் மே தினப் பேரணி- பொதுக் கூட்டம் நடைபெற்றது. ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.கே. பொன்னுத்தாய் பேரணியை துவக்கி வைத் தார். சோழவந்தான் பேரூராட்சி கலைய ரங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் துணைச்செயலாளர் பி. பொன்ராஜ் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் ஜி.கௌரி வரவேற்றார். புற நகர் மாவட்டத் தலைவர் செ.கண்ணன், மாவட்டச் செயலாளர் கே.அரவிந்தன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் வி.பிச்சைராஜன், சி. மணிகிருஷ்ணன், ஆகியோர் பேசினர். சிஐ டியு மாநிலச் செயலாளர் எம்.தனலட்சுமி சிறப்புரையாற்றினார். தையல் சங்க நிர்வாகி இருளப்பன் நன்றி கூறினார்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சிஐடியு- ஏஐடியுசி சார்பில் மே தினப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் வீரையா தலைமை வகித்தார். ஏஐ டியுசி மாநில துணைச் செயலாளர் ராமச்சந்தி ரன் முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச்செயற்குழு உறுப்பி னர் கே.சாமுவேல்ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் சி.மகேந் திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.