districts

மதுரை முக்கிய செய்திகள்

மே 19 ஆண்டிபட்டியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தேனி ,மே .16- தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 19 ஆம் தேதி  காலை 11  மணியள வில் தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா, தலைமை யில் ஆண்டிபட்டி அரசு தென்னை நாற்றுப் பண்ணை யில் நடைபெறவுள்ளது. எனவே தேனி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அந்தந்த வட்டாரத்தி லுள்ள வேளாண்மை மற்றும் உழவர்நலத் துறைகள் சம்பந்தமான திட்டங்கள், குறைகளை கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவித்து பயன்பெறவும், மேலும் தங்களது குறைகளை மனுக்களாக குறைதீர் தினக் கூட்டத்தில் வழங்கலாம். விவசாயிகளிடம் பெறப்படும் மனுக்கள் மீது மாவட்ட ஆட்சியர்  தலைமையிலான அலுவலர்கள் கண்காணித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மனுக்களை அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.  எனவே, விவ சாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயி கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு  மாவட்ட ஆட்சியர்  தெரிவித்துள்ளார்.

காதல் திருமணம் செய்தவர் மர்மச்சாவு: போலீசார் விசாரணை

தேனி ,மே.16- காதல் திருமணம் செய்தவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள் .  தேனி மாவட்டம், சின்னமனூர் ஆலமரத்தெருவை சேர்ந்த இருளப்பன் மகன் பிரபாகரன்(30). இவர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு மாற்று சமூகத்தை சேர்ந்த மீனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி கருத்துவேறுபாடு ஏற்பட்டு வந்ததால் மீனா கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் பிரபாகரன் தனது வீட்டில் இறந்து கிடப்பதாக அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. அவர் அருகே பூச்சி மருந்து பாட்டிலும் இருந்துள்ளது.  இதுகுறித்து பிரபாகரனின் தாய் போதுமணி சின்ன மனூர் காவல்நிலையத்தில்  புகார் அளித்துள்ளார். அதில்  தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதால் உரிய விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர்.

பாஞ்சை விழா: விதிகளை மீறிய  வாகனங்கள் மீது வழக்குப்பதிவு

தூத்துக்குடி, மே 16 பாஞ்சாலங்குறிச்சி திருவிழாவின்போது விதிமுறைகளை மீறி செயல்பட்ட 19 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  தூத்துக்குடி  மாவட்டத்தில் பாஞ்சாலங்குறிச்சி திருவிழாவின்போது அபாயகரமாகவும், பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக பல்வேறு காவல் நிலையங்க ளில்  2 கனரக வாகனங்கள், 7 நான்கு சக்கர வாகனங்கள் உட்பட 19 வாக னங்கள் மீது 11 வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. தூத்துக்குடி  மாவட்டம் முழுவதும் மொத்தம் 57 இடங்களில் 8 காவல்துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் 8 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 68 உதவி ஆய்வாளர்கள் உட்பட 160 போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்படி வாகன சோதனையில் போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றம் விதிமுறைகளை மீறுபவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

பராமரிப்பு பணிகளால் ரயில் சேவைகளில் மாற்றம்

மதுரை, மே. 16- மதுரையில் திருச்சூர் யார்ட்  மற்றும் திருவனந்தபுரம் கோட்டத்தின் ஆலுவா - அங்கமாலி பிரிவு இடையே நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக , ரயில் சேவைகளில் பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முழுமையாக  ரத்து செய்யப்படும் ரயில்கள்  மதுரையில் இருந்து மே 22  அன்று 16.10 மணிக்கு  புறப்படும் ரயில் எண். 16344 மதுரை - திருவனந்தபுரம் சென்ட்ரல் அமிர்தா எக்ஸ்பிரஸ் முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து மே 21  அன்று  20.30 மணிக்கு புறப்படும் ரயில் எண். 16343 திருவனந்தபுரம் சென்ட்ரல் - மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. பகுதியாக ரத்து செய்யப்படும் ரயில்கள்  குருவாயூரில் இருந்து மே 22 அன்று 23.15 மணிக்கு புறப்படும் ரயில் எண். 16128 குருவாயூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ்  குருவாயூர் மற்றும் எர்ணா குளம் இடையே பகுதியாக ரத்து செய்யப் படுகிறது. இந்த ரயில் மே 23 அன்று எர்ணா குளத்திலிருந்து  அதன் திட்டமிடப்பட்ட புறப்படும் நேரமமான  01.20 மணிக்கு புறப்படும். சென்னையில் இருந்து மே 21 அன்று காலை 9 மணிக்கு புறப்படும் ரயில் எண். 16127 சென்னை எழும்பூர் - குருவாயூர் எக்ஸ்பிரஸ்  எர்ணாகுளம் மற்றும் குருவா யூர் இடையே பகுதியாக ரத்து செய்யப் படுகிறது.

விவசாயிகளுக்கு வெளிநாட்டு  தொழில்நுட்ப பயிற்சி

விருதுநகர், மே.16- விருதுநகர் மாவட்ட விவசாயிகள் அயல்நாட்டில் உயர் தொழில்நுட்ப பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதில் மேலும் கூறியதாவது :   விருதுநகர் மாவட்ட விவசாயிகள், தோட்டக்கலை, வேளாண்மை பயிர் சாகுபடியில் உயர் தொழில் நுட்பங்களை பெறும் வகையில் இஸ்ரேல், நெதர்லாந்து போன்ற அயல்நாடுகளுக்கு சென்று பயிற்சி பெறலாம். விருப்பம் உள்ள விவசாயிகள் tnhorticulture.tn.gov.in/thnortinet/registration-new.php  என்ற இணையதள முகவரியில் நேரடியாகவோ அல்லது அந்தந்த வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலர் மூலமாகவோ பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

விருதுநகர் அருகே சாலை விபத்தில் ஒருவர் பலி

விருதுநகர், மே.16- விருதுநகர் அருகே உள்ள வாய்பூட்டான்பட்டியை சேர்ந்தவர் ஜெயராம்(37). இவர்  விருதுநகர்-சாத்தூர் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டி ருந்த போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்ததில்  படுகாயமடைந்துள்ளார்.   அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்  உயிரிழந்தார். இதுகுறித்து ஜெயராமின் சகோதரர் மாரிசாமி கொடுத்த புகாரின்பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மே 19 இராமநாதபுரத்தில் வேலைவாய்ப்பு முகாம்

இராமநாதபுரம்,மே 16- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர்  ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது: தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலும் வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் பொருட்டு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாமில் தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தெரிவு செய்து கொள்ளலாம். அதேபோல இம்முகாமில் 10 ஆம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடித்த வேலைநாடுநர்கள், ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்துகொண்டு தங்களது தகுதிக்கேற்ப தனியார்துறை நிறுவனங்களில் பணிநியமனம் பெறும் வாய்ப்பினை பெறலாம். இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வேலைநாடுநர்கள் தங்களின் சுய விபரங்களடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் 19.05.2023 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்துகொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறும், இம்முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதினால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது எனவும் அரசுத் துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்ய பரிசீலிக்கப்படுமெனவும்,  மேலும் தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்களுக்கு கட்டணம் ஏதுமின்றி முற்றிலும் இலவசமாக தமிழக அரசால் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம்  “Tamil Nadu Private Job Portal” (www.tnprivatejobs.tn.gov.in)  என்ற இணையதள சேவை வழங்கப்படுகிறது. இவ்விணையதளத்தில் பதிவு செய்து தனியார் துறை நிறுவனங்களும் வேலைதேடும் இளைஞர்களும் பயன்பெறலாம். இவ்வாறு அதில்  தெரிவித்துள்ளார்.

உழவர் உற்பத்தியாளர்களுக்கு சிவகங்கையில் பயிற்சி கருத்தரங்கம்

சிவகங்கை,மே 16- சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றி யத்தில், தனியார் மஹாலில் மே 16 அன்று காய்கறி மற்றும் மிளகாய் உழவர் உற்பத்தியாளர்களுக்கான பயிற்சி கருத்தரங்கினை, மாவட்ட ஆட்சித்தலைவர்.ப.மதுசூதன் ரெட்டி துவக்கி வைத்தார். ஆட்சியர் பேசுகையில், இப்பயிற்சி கருத்தரங்கில் விவ சாயிகள் சாகுபடி செய்யும், உற்பத்திப் பொருட்களை, சந்தைப்படுத்துவதற்கான தொழில்நுட்ப ரீதியான கருத்துக்களை, இக்கருத்தரங்கின் வாயிலாக, விஞ்ஞானிகள் எடுத்துரைக்கவுள்ளனர். விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில், பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்து, திறன்மிக்க வல்லுநர்க ளைக் கொண்டு, இக்கருத்தரங்கில் விரிவாக எடுத்துரைக் கப்படவுள்ளது. இதனை, முறையாக பயன்படுத்திக் கொண்டு, மற்ற விவசாயிகளுக்கும், இது குறித்து எடுத்துரைத்து பயன்பெறச் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், பல்வேறு வகையான விதைகளை விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கி னார்.

கோபால்பட்டி அருகே விவசாயி கொலை வழக்கில் 9 பேர் கைது 

நத்தம், மே 16- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதி கோபால்பட்டி அருகே சக்கிலியான் கொடையைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 55). விவசாயி. மாடுகள் வாங்கி விற்பனை செய்து வந்தார். இவர்  அதே பகுதியில் உள்ள  தோட்டத்தில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.  சம்பவ இடத்திற்கு வந்த சாணார்பட்டி போலீசார் அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக டி.எஸ்.பி. உதயகுமார் தலைமையில் காவல்  ஆய்வாளர் தங்க முனியசாமி, சார்பு ஆய்வாளர் சிராஜூதீன்  ஆகியோர் கொண்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் கண்ணன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனை மறைக்க அவரை தூக்கில் தொங்க விட்டதும் விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து கண்ணனின் சகோதரி அழகி, அவரது கணவர் சின்னக்காளை, மகன் அழகர்சாமி, கண்ணனின் தம்பி முருகன், அவரது மனைவி வெள்ளையம்மாள், மகன்கள் சதீஸ்குமார், குணா உள்பட 9 பேரை பிடித்து விசாரித்தனர்,இதில் சொத்து தகராறில் கண்ணன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சதுரகிரி  கோவிலுக்குச் செல்ல இன்று முதல் 4 நாட்கள் அனுமதி

திருவில்லிபுத்தூர், மே 16- விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்குச் செல்ல மே 17 முதல்  4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது. நான்கு நாட்களுக்கு காலை 7 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை  பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்வ தற்கு வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் எளிதில் தீப்பற்றும் பொருட்க ளையோ, சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களையோ வனப்பகுதிக்கு எடுத்து செல்ல கூடாது என வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.

களக்காடு புலிகள் காப்பகத்தில் யானைகள்  கணக்கெடுப்பு பணி இன்று தொடக்கம்

திருநெல்வேலி, மே 16- களக்காடு புலிகள் காப்பகத்தில் கடந்த 2017 ம் ஆண்டு யானைகள் கணக்கெ டுக்கும்  பணி நடந்தது. அதன்பின் யானைகள் குறித்த        கணக்கெடுப்பு பணிகள்  புதன் கிழமை தொடங்கி, 19-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. களக்காடு புலிகள் காப்பகத்தி ற்குட்பட்ட களக்காடு, திருக்குறுங் குடி, கோதையாறு வனசரகங்க ளில் 32 இடங்களில் செல்போன் செயலிமூலம் கணக்கெடுப்பு பணி கள் நடைபெறுகிறது. இதில் வனத் துறை ஊழியர்கள், தன்னார்வலர் கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட வர்கள் ஈடுபட உள்ளனர். இவர்கள் யானைகளை நேரில் காண்பது, அவைகளின் எச்சங்களை சேக ரித்தல், நீர்நிலைகளை சார்ந்து செல்லுதல் உள்ளிட்ட3 முறைகளில் கணக்கெடுப்பில் ஈடுபடுகின்றனர். இதையொட்டி கணக்கெடுப்பு குழுவினருக்கு  தலையணையில் சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது. புலிகள் காப்பக துணை இயக்கு னர் ரமேஷ்வரன் பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்.அதனை தொடர்ந்து சூழலியலாளர் ஸ்ரீதரன் கணக்கெடுப்பு குழு வினருக்கு கணக்கெடுப்பது பற்றியும், சேக ரிக்கப்படும் புள்ளி விபரங்களை செல்போனில் பதிவு செய்வது குறித்தும் பயிற்சி அளித்தார். முகா மில் வனசரகர்கள் களக்காடு பிர பாகரன், கோதையாறு சிவலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கணக்கெடுப்பு முடிந்தவுடன் சேகரிக்கப்படும் புள்ளி விபரங்கள் சென்னை வனத்துறை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக் கப்படும். அங்கு நடைபெறும் ஆய்வு க்கு பின் களக்காடு மலையில் வாழும் யானைகளின் எண்ணிக்கை தெரிய வரும் என்று வனத்துறையினர் தெரி வித்தனர்.

பிரம்மாண்ட பொருநை அருங்காட்சியகம்  முதல்வர் நாளை அடிக்கல் நாட்டுகிறார்

திருநெல்வேலி, மே 16- கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி நெல்லை மாநகரில் பொருநை நாகரி கத்தை மையப்படுத்தி பொருநை நாகரிகத்தின் அடிநா தமாக இருக்கும் தாமிரபரணி ஆற்றின் கரையில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளையில் அகழாய்வு மூலம் கிடைத்த பல்வேறு பொ ருட்களை காட்சிப்படுத்தும் வகையில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக் கப்படும் என்று அவர் அறி வித்தார். இதனைத்தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் நெல்லையில் அருங்காட்சியகம் அமைப்ப தற்கு இடம் தேர்வு செய்யும் பணியில் தொல்லியல் துறை அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலை யில் பாளை கே.டி.சி. நகரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் 4 வழிச்சாலையில் ரெட்டியார்பட்டி மலைப்பகுதி யில் பொருநை அருங்காட்சிய கம் அமைக்க முடிவு செய்து அந்த இடத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் பார் வையிட்டு ஆய்வு செய்தார்.

மொத்தம் ரூ.15 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள இந்த அருங்காட்சி யகத் திற்கு 13 ஏக்கர் பரப்பளவில் இடம் கையகப்படுத்தப்பட்டுள் ளது. உலகத்தரத்தில் அமைய உள்ள இந்த அருங்காட்சி யகத்தில் அகழாய்வு மூலம் கிடைத்த பொருட்கள் பார்வை க்கு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி கொற்கையில் 812 பொருட்கள், ஆதிச்சநல்லூ ரில் 1,620 பொருட்கள், சிவகளை யில் 185 பொருட்கள் என 2,617 பொருட்கள் அகழாய்வு மூலம் கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் 106 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டு உள்ளன. மேலும் 3 இடங்களில் கிடைத்துள்ள வளையல்கள், பாசிமணிகள், சுடுமண் பொம் மைகள், இரும்பு, தாமிரத்தா லான பொருட்கள், நாண யங்கள், பல்வேறு வகையான பானை ஓடுகள், வெளிநாடுக ளுடன் தமிழர்களின் தொடர்பு கள் குறித்த பொருட்களும் இங்கு காட்சிப்படுத்தப் படுகிறது. அருங்காட்சியகமாக மட்டு மல்லாமல் இதை சுற்றுலாத் தலமாக பயன் படுத்தும் வகை யில் அமைய இருக்கிறது. இது நெல்லையின் அடையா ளமாக திகழும். தமிழரின் அடை யாளத்தை உலக மக்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் அமைய உள்ள இந்த அருங் காட்சியகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற உள்ளது.முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைக்க உள்ளார். 

சட்டவிரோத மது விற்பனை, கள்ளச்சாராயம் காய்ச்சுதல் குறித்து மக்கள் புகார் தெரிவிக்கலாம்

 மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மதுரை,மே 16- மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை தொடர்பான ஆய்வுக் கூட்டம் மே  16 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர்  தலைமையில் நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் கள்ளச்சாரயம் /எரிசாராயம் காய்ச்சப்படுகிறதா அல்லது விற்பனை செய்யப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்கவும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடுவர்கள் மீது குண்டர்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியரால் அறிவுரைகள் வழங்கப்பட்டது.  மேலும் ஸ்பிரிட் உரிமம் பெற்ற நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்லூரிகளை காவல் துறையினர், கலால் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் தொடர்ந்து கண்காணித்து முறைகேடு ஏதும் நடைபெறா வண்ணம் பார்த்து கொள்ள வேண்டும் எனவும் உரிமம் விதிகள் மீறப்படின் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியரால் அறிவுரைகள் வழங்கப்பட்டது.  இக்கூட்டத்தில் மதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் துணை ஆணையர் (தலைமையிடம்), வருவாய் கோட்டாட்சியர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள், உதவி ஆணையர் (கலால்) (பொறுப்பு), காவல் ஆய்வாளர்கள், மற்றும் கோட்டக்கலால் அலுவலர்கள் கலந்து கொண்டனர். சட்டவிரோதமாக மது விற்பனை, கள்ளச்சாராயம் காய்ச்சுதல் போன்ற புகார் தொடர்பான இலவச உதவி எண்.10581 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்கள் புகாரினை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.