சிவகங்கை ,ஜூலை 31- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட 16 ஆவது மாநாடு ஜூலை 31 ஞாயி றன்று சிவகங்கையில் தோழர்கள் மைதிலி சிவ ராமன், கமலம் நினைவரங்கில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் காந்திமதி தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் தம யந்தி சங்கக்கொடியை ஏற்றினார். மாவட்ட துணைத் தலைவர் சாந்தி வரவேற்றார். மாவட்ட துணைத்தலை வர் மணியம்மா அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநிலச் செயலாளர்கள் எஸ்.கே.பொன்னுத்தாய், சசிகலா, மாநில துணை செயலாளர் கீதா ,ஆகியோர் உரை யாற்றினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மோகன்,சிஐடியு மாவட்ட செயலாளர் சேது ராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட னர். மாவட்டத் தலைவராக பாக்கியலட்சுமி, மாவட்ட செயலாளராக சாந்தி, பொருளாளராக ஜெயந்தி, துணைத் தலைவராக சண்முகப்பிரியா, துணைச் செய லாளராக பவுன்தாய் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். சிவகங்கை மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை செய்யக் கூடிய விவசாய தொழிலாளர்களுக்கு தினம்தோறும் ரூ.400 கூலி மற்றும் .வருடத்திற்கு 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும் .சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பெண் மருத்துவர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். பல்வேறு அரசு மருத்துவமனைகளில் செயல்படாமல் உள்ள தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை செயல்படுத்த வேண்டும். ஸ்கேன் இயந்திரத்தை இயக்குவதற்கு பணியா ளர்களை நியமிக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத் தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மீது உறுதிமிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுகிறவர்களுக்கு துரிதநடவடிக்கை எடுப்பதற்கு போக்சோ நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.