districts

img

பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுத்து நிறுத்துக!

தேனி, ஜூலை 30- பெண்கள் மற்றும்  குழந்தை கள் மீதான பாலியல் வன்முறை களை தடுத்து நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின்  தேனி மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது . மாதர் சங்கத்தின் தேனி மாவட்ட  8 ஆவது மாநாடு போடியில் சனிக் கிழமையன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் ஈஸ்வரி, சி.சுஜாதா, சித்திகா பர் வீன் ஆகியோர் தலைமை வகித்த னர். அஞ்சலி தீர்மானத்தை மாவட்டக்குழு உறுப்பினர் கே. கோமதி வாசித்தார் .வரவேற்புக் குழு செயலாளர் எஸ் .மீனா பிரதி நிதிகளை வரவேற்று பேசினார் .  மாநாட்டினை மாநில நிர்வாகி என் . உஷா பாசி துவக்கி வைத்துப் பேசி னார். மாவட்ட செயலாளர் சு.வெண்  மணி வேலை அறிக்கையையும் ,மாவட்டப்  பொருளாளர் பி.சித்ரா வரவு -செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர் .மாநிலச் செயலா ளர் கே.பாலபாரதி வாழ்த்திப் பேசி னார். மாநிலச் செயலாளர் எஸ்.லட்சுமி நிறைவுரையாற்றினார்.  புதிய நிர்வாகிகள்  மாநாட்டில் 17 பேர் கொண்ட  மாவட்டக்குழு தேர்வு செய்யப் பட்டது. மாவட்ட தலைவராக எஸ். மீனா, செயலாளராக பி.சித்ரா, பொரு  ளாளராக என்.அம்சமணி, துணைத் தலைவராக சு.வெண்மணி, துணைச்  செயலாளராக கே.கோமதி ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர் . மகளிர் சுய உதவிக்குழு என்ற  பெயரில் பெண்களை பாதிக்கும் நுண் நிதி கடன் நிறுவனங்கள் செயல்பாட்டை கண்காணித்து தடுத்து நிறுத்த வேண்டும் .மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் கொடுப்பதை தமிழக அரசு உறுதி  செய்ய வேண்டும். தேர்தல் அறிக் கையில் கொடுத்தபடி குடும்ப தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். நிறுத்தப்பட்ட திருமண உதவி திட்டம், தாலிக்கு  தங்கம் வழங்கும் திட்டத்தை மீண்  டும் செயல்படுத்த வேண்டும் என்  பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.