தூத்துக்குடி, அக். 1- தூத்துக்குடியில் 11 வயது சிறுமி தனது உறவினாரால் பாலியல் வன்கொடுமை செய்யபட்டத்தை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் தூத்துக்குடி அண்ணா நகர் சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுத்திட வேண்டும், விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்திட வேண்டும், குற்றவாளி வெளியே வராத படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரணம் வழங்க வேண்டும், சிறுமியின் தாய்க்கு அரசு வேலை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கலைச்செல்வி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பி.பூமயில், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.சித்ரா தேவி, எம்.கமலம், த.ஜானகி, ஆகியோர் கண்டன பேசினர். மாநிலக்குழு உறுப்பினர் இணிதா, மாவட்டக்குழு உறுப்பினர் மாரியம்மாள், எம்.வெங்கடேஸ்வரி, மாரியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.