districts

img

விலைவாசி உயர்வை கண்டித்து மாதர் சங்கத்தினர் ஒப்பாரி போராட்டம்

விருதுநகர், நவ.9- தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், அத்தியாவசிய உணவுப் பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய் வகைகள், மாவுப் பொருட்கள் ஆகியவற்றின் விலை உயர்ந்து வருகிறது. அவற்றை கட்டுப்படுத்த வேண்டும். ரேசன் கடைகளில் அனைத்துப் பொருட்களையும் குறைந்த விலையில் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஒப்பாரி போராட்டம் நடத்தினர்.  விருதுநகரில் 7-ஆவது வார்டு பகுதியில் நடைபெற்ற போராட்டத்திற்கு நகரச் செயலாளர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் என்.உமாமகேஸ்வரி துவக்கி வைத்தார். இதில், நகர் குழு உறுப்பினர்கள் கார்த்திகை செல்வி, மகேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.