districts

img

செல்லூர்- குலமங்கலம் சாலையை சீரமைத்திடுக

மதுரை, மே 16-  செல்லூர்- குலமங்கலம் சாலையை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் வடக்கு - 1, 2 ஆம்பகு திக்குழுக்கள் சார்பில் மதுரை வடக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதியிடம் மனு அளிக்கப்பட்டது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாநிலக்குழு உறுப்பி னர் இரா. விஜயராஜன், வடக்கு - 1  பகு திக்குழுச் செயலாளர் வி.கோட்டைச் சாமி, வடக்கு-2 பகுதிக்குழுச் செயலா ளர்  ஏ.பாலு, மாவட்டக்குழு உறுப்பி னர்கள் கே.அலாவுதீன், மாமன்ற உறுப் பினர் டி. குமரவேல் ஆகியோர் மே16 செவ்வாயன்று  சட்டமன்ற உறுப்பினர் கோ. தளபதியை நேரில் சந்தித்தனர்.  அப்போது, செல்லூரிலிருந்து கோசாகுளம் வரை குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டப்பணி கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக நடந்து வருகிறது .தற்போது வரை திட்ட வேலைகள் மந்தமான முறையில் நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் , பள்ளி, கல்லூரி மற்றும் பல் வேறு பணிகளுக்குச் செல்லும்  தொழி லாளர்கள்  பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை குண்டும் குழியுமாக மக்கள் நடந்துசெல்லக்கூட முடியாத நிலையில் சேதமடைந்துள்ளது. இப்பகு தியில் உள்ள மக்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்கின்றனர். மழைக் காலங்களில் சேறும் சகதி யுமாக விபத்துகள் நிகழும் இடமாக மாறியுள்ளது. இந்த சாலையினை சீர மைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சி சார்பில் பலமுறை அரசு நிர்வா கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் மனுக்கள்  கொடுக் கப்பட்டும் போராட்டங்கள் நடத்தப் பட்டும்  தொடர்ந்து பணிகள் மிகவும் மந்தகதியிலே நடைபெற்று வரு கின்றன. எனவே சட்டமன்ற உறுப்பினர்  தாங்கள் நேரில் ஆய்வு செய்து பணிக ளை விரைந்து முடித்து செல்லூர் - குலமங்கலம் சாலையை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.