மதுரை, ஏப். 29- மதுரை மீனாம்பாள் புரத்தை சேர்ந்த சிவ பிரகாஷ்- பிரரேமலதா தம் பதியர் கந்துவட்டி கொடு மையில் தற்கொலை செய்து கொண்டனர்.இவர்களை தற்கொலைக்கு தூண்டிய கந்துவட்டிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் . தமிழக அரசே கந்துவட்டி தடுப்பு சட்டத்தின் கீழ் உரியமுறையில் நடவ டிக்கை எடுக்க வேண்டும். பெற்றோரை இழந்து தவிக் கும் 3 மற்றும் 5 வயது குழந்தைகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண் டும் என வலியுறுத்தி மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் வடக்கு - 2 பகுதிக்குழு சார்பில் மீனாம்பாள்புரம் சர்க்கரை செட்டியார் படிப்பகம் அருகில் சத்தியமூர்த்தி தெருவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பகு திக்குழு செயலாளர் ஏ. பாலு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜய ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். சசிகலா ஆகியோர் கண்டன உரை யாற்றினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜா.நரசிம்மன், அ. ரமேஷ், எம். பாலசுப்பிரமணியம், வை. ஸ்டாலின், டி. செல்வ ராஜ் மற்றும் அப்பகுதி மக்கள் பங்கேறறனர்.