districts

img

திண்டுக்கல்: மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

திண்டுக்கல், பிப்.4- திண்டுக்கல் மாநகராட்சியில் வார்டு எண். 2ல் சிபிஎம் வேட்பாளர் கே.எஸ்.கணேசன் வேட்புமனுத்தாக்கல் செய்தார். மனுத்தாக்கல் செய்த பிறகு அவருக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. கட்சியின் தலைவர்கள் பி. ஆஸாத், ஏ.அரபுமுகமது, சி.பாலச் சந்திரபோஸ்,  கே.ஆர்.பாலாஜி, பால முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஒட்டன்சத்திரம் நகராட்சியில் வார்டு எண். 16ல் சிபிஎம் வேட்பாளர் எஸ். சிவமணி வேட்புமனுத்தாக்கல் செய்தார். கீரனூர் பேரூராட்சியில் 2வது வார்டில் முருகேஷ் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.  இதே போல் கன்னிவாடி பேரூராட்சி யில் வார்டு எண். 1ல். எஸ்.மணிமாலதி, 10வது வார்டில் அப்துல்ஹக்கீம் ஆகி யோர் மனுத்தாக்கல் செய்தனர்.   எரி யோடு பேரூராட்சியில் வார்டு எண். 7ல் சந்தியா வேட்புமனு செய்தார்.  பாளையம் பேரூராட்சியில் 1வது வார்டில் பி. ராஜாமணி, 2வது வார்டில் பி.சேகர், ஆகியோர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். (நநி)