districts

img

சத்திரப்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

இராஜபாளையம், ஏப்.22- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி ஆரம்ப சுகாதார நிலை யத்தை தரம் உயர்த்த வேண்டும்.  போதிய பணி யாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று  வலியுறுத்தியும் பணியாளர்களை வேறு இடத் திற்கு தற்காலிகமாக மாறுதல் செய்வதை கண்  டித்தும் சத்திரப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   ஜீவானந்தம் தலைமை வகித்தார். ஒன்றிய  செயலாளர் முனியாண்டி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சோமசுந்தரம், சஞ்சீவி நாச்சி யார்  ஆகியோர் பேசினர்.