districts

img

கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொல்லங்கோடு வட்டாரக்குழு உறுப்பினராக செயல்பட்டு வந்தவர் டி.ஆர்.மேரி. அவரது மூன்றாம் ஆண்டு நினைவு தினமான செப்.29 வியாழனன்று,  அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. விஜயமோகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எப்.ஜாண்,  டி.எஸ்.அஜித், மற்றும் ஆசிரியர் முரளி, ஜி.ரமேஷ், உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து நினைவஞ்சலி செலுத்தினர். இதுபோல, கொல்லங்கோடு வட்டாரக்குழு சார்பில் டி.ஆர்.மேரி படத்துக்கு டி.எஸ்.அஜித்  தலைமையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.