மானாமதுரை, ஏப்.15- சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன்- சோமநாதர் சுவாமி கோயில் சித்திரைத் திருவிழாவில் ஒன்பதாம் நாள் விழாவாக வெள்ளிக் கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங் கேற்க திருத்தேரோட்டம் நடைபெற்றது. சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்தி ற்கு உள்பட்ட மானாமதுரை ஸ்ரீ ஆனந்த வல்லி அம்மன்- சோமநாதர் சுவாமி கோயி லில் சித்திரை திருவிழா தொடங்கி நடை பெற்று வருகிறது. திருவிழாவில் எட்டாவது நாள் விழாவாக நடைபெற்ற திருக்கல்யா ணத்தை முன்னிட்டு கடந்த வியாழக் கிழமை இரவு திருக்கல்யாண மண்டகப் படிதாரர் சார்பில் பூக்களாலும் மின்விளக்கு களாலும் அமைக்கப்பட்ட பூப்பல்லக்கில் திருமணக் கோலத்தில் ஆனந்தவல்லி அம்மனும் புதிதாக உருவாக்கப்பட்ட அம்பாரியில் யானை வாகனத்தில் பிரியா விடை உடன் சோமநாதர் சுவாமியும் எழுந்த ருளி கோயிலைச் சுற்றி வீதி வந்தனர். அதைத்தொடர்ந்து திருவிழாவின் ஒன்பதாவது நாள் நிகழ்வாக நடைபெற்ற தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலையில் பிரியாவிடை உடன் சோமநாதர் சுவாமி பெரிய தேரிலும் ஆனந்தவல்லி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர். பின்னர் பூஜைகள் நடைபெற்று காலை 11.10 மணிக்கு இரு தேர்களும் நிலை யிலிருந்து புறப்பட்டன. திரளானோர் வடம் பிடித்து தேர்களை இழுத்து வந்தனர். பெரிய தேருக்கு முன்னால் முருகன், விநாய கர் சப்பரமும் பின்னால் ஆனந்தவல்லி அம்மன் தேரும் சென்றன. தாரை தப்பட்டை கள், மேளதாளங்கள், கயிலாய வாத்தியங் கள் முழங்க இளைஞர்களின் ஆட்டம் பாட்டத்துடன் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் சுவாமி தேரும் அம்மன் தேரும் ஆடி அசைந்து வந்து 11:50 மணிக்கு நிலை சேர்ந்தன. தேரோட்ட விழாவில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங் கேற்றனர்.