திண்டுக்கல், அக்.21- கலைஞர் காப்பீடு திட்டத் தில் நடைபெறும் குளறுபடி களை களையக் கோரியும் யுனைடெட் இந்தியா இன் சூரன்ஸ் நிறுவனத்தை கண்டித்தும் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர், ஆசிரி யர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு திட்டம் கலைஞர் ஆட்சியில் துவங்கப்பட்டது. இத்திட்டத்தில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலை மையிலான தமிழக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகை யில் செயல்படும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நியாயமற்ற நடவடிக்கையில் மாற்றம் காண வேண்டும் என்றும் அரசு ஊழியர்களை மருத் துவமனையில் வைத்துக் கொண்டு பேக்கேஜ் தான் இன்சூரன்ஸ் என இன் சூரன்ஸ் நிறுவனமும் பணம் கட்ட வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாக மும் அரசு ஊழியர்களின் உயிரோடு விளையாடும் நிலையை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி திண்டுக் கல் ஆட்சியரிடம் அரசு ஊழி யர் சங்கம் சார்பாக புகார் மனு கொடுக்கப்பட்டது. இதனையொட்டி நடை பெற்ற முற்றுகைப் போராட் டத்திற்கு அரசு ஊழியர் சங் கத்தின் மாவட்ட தலைவர் முபாரக் அலி தலைமை வகித்தார். போராட்டத் தை விளக்கி மாவட்டச் செய லாளர் விவேகானந்தன் பேசி னார். மாவட்டப் பொருளா ளர் குப்புசாமி உட்பட மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.