மதுரை, ஜூலை 1- மதுரை மேற்கு சட்டமன்ற தொகு திகளுக்கு உட்பட்ட மாநகராட்சி வார்டுகளில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தலை மையில் சனிக்கிழமையன்று மக்கள் குறை தீர்ப்பு மற்றும் கோரிக்கை மனு பெறும் முகாம் நடைபெற்றது. இதில் தலைமையேற்று பேசிய சு.வெங்கடேசன் எம்.பி., மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 123 ஊராட்சிகள். இதில் 680 கிராமங்கள் உள்ளன. இந்த 123 ஊராட்சிகளிலும் மக்கள் சந்திப்பு இயக்கத்தை வெற்றிகரமாக முடித் துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சுமார் 16 துறைகளின் 40 அதிகாரிகளுடன் ஒவ்வொரு ஊராட்சிக்கும் சென்று மக்களை சந்தித்து அதற்கான உட னடி தீர்வு காண்பதற்கான ஏற்பாடு களை செய்துள்ளோம். சுமார் ஒரு வருடம் இந்த மக்கள் சந்திப்பு இயக் கத்தை நடத்தியுள்ளோம். அந்த வகையில் மதுரை மாநகராட்சி பகுதிகளில் இப்போது மக்கள் சந் திப்பு இயக்கத்தை நடத்தி வரு கின்றோம். இதில் மதுரை தெற்கு,
வடக்கு, கிழக்கு ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்தி முடித்து இப் போது மேற்கு தொகுதியில் மக்கள் சந்திப்பு இயக்கத்தை இரண்டு பகுதி யாக நடத்துகின்றோம். அடுத்த கட்ட மாக ஜூலை 8 ஆம் தேதி இரண்டு பகுதியாக நடக்கின்றது. ஜூலை - 6 ஆம் தேதி மத்திய சட்டமன்ற தொகு தியிலும், ஜூலை - 4ஆம் தேதி பரவை பேரூராட்சியில், ஜூலை - 7ஆம் தேதி மேலூரில் மாற்றுத்திறனாளி களுக்கான உபகரணங்கள் வழங் கும் முகாம் அதனை தொடர்ந்து கொட்டம்பட்டி வெள்ளாளப்பட்டி பேரூராட்சி மக்கள் சந்திப்பு முகாம், ஜூலை - 11 ஆம் தேதி மேலூர் நகர் பகு தியிலும் நடைபெறும் இவற்றை முடித்தால் தொகுதி முழுவதும் ஓராண்டில் 123 ஊராட்சி, ஒரு நக ராட்சி, இரண்டு பேரூராட்சி, ஒரு மாந கராட்சி ஆகியவைகளில் மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்தி முடித் துள்ளோம். அந்த அடிப்படையில் முழு முற்றாக மக்கள் சந்திப்பு இயக் கத்தை வெற்றிகரமாக நடத்தி முடித் துள்ளோம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மக்கள் சந்திப்பு இயக்கத்தில் 16 துறைகளை சேர்ந்த மாநகராட்சி மட்டுமல்ல நிர்வாகத்துறை, வரு வாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை என்று 16 துறை சார்ந்த அதிகாரி கள் வந்துள்ளார்கள். மக்கள் கொடுக் கப்படும் மனுக்கள் முறையாக விசா ரிக்கப்படும் அதில் ஒரு வாரம் இரண்டு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மக்கள் சந்திப்பு இயக்கத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை நாங்கள் சந் தித்துள்ளோம். என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கி றேன் என்று தெரிவித்தார்.
ஸ்ரீலெட்சுமி மஹாலில் நடை பெற்ற முகாமில் 177 மனுக்கள் பெறப் பட்டன. இதில் பெயர் மாற்றம், பட்டா மாற்றம் ,விதவைகள் உத வித்தொகை, முதியோர் உத வித்தொகை, மாற்றுத் திறனாளி களுக்கான உதவித்தொகை ஆகிய பத்துக்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது இதில் குறிப்பாக மதுரை காள வாசல் பகுதியைச் சேர்ந்த சோலை யப்பன் - குருவம்மாள் மற்றும் ஆர். பாண்டி ஆகியோர் வீட்டு வரி என்பது இரண்டு வரிகளாக 2008 ஆம் ஆண்டு முதல் கட்டி வந்தனர். அதனை மாற்றி ஒருவரியாக கொடுக்க வேண் டும் என்று 2008 ஆம் ஆண்டு முதல் விண்ணப்பித்து வந்தனர். இந் நிலையில் 15 ஆண்டுகளுக்குப் பின் இந்த முகாமில் அதிகாரிகள் நட வடிக்கை மேற்கொண்டு இரண்டு வரிகளாக இருந்த வரி விதிப்பை ஒன்றாக மாற்றி அதற்கான உத்தரவு ஆணையினை பயனாளிகளிடம் வழங்கினர். பழங்காநத்தம் மாநகராட்சி சமு தாயக்கூடத்தில் நடைபெற்ற முகா மில் 380 க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அதில் விதவைகள் உதவித்தொகை, முதல் பட்டதாரி சான்று, பட்டா மாறுதல் என்று விண்ணப்பித்தவர்களில் 20 க்கும் மேற்பட்டவர்களுக்கு உடனடியாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மாநகராட்சி பள்ளியை சீரமைக்க நடவடிக்கை
மேலும் மதுரை பழங்காநத்தம் பகுதியில் மாநகராட்சி சொந்த மான சோமசுந்தரம் பாரதி பள்ளி மற்றும் பொது கழிப்பறை, விளை யாட்டுக்கூடம் ஆகியவைகளை சீர மைத்து கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மனு அளித்தனர்.இதன் அடிப்படையில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்து அவற்றை சீரமைத்து கொடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஒப்பு தல் அளித்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் இந்திராணி, ஆணையாளர் பிரவீண் குமார், துணை மேயர் டி. நாகராஜன், மண்டல தலைவர்கள் சரவண புவனேஸ்வரி, பாண்டிச் செல்வி, சுவிதா விமல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் இரா. விஜயராஜன், எஸ். பாலா, மாநகர் மாவட்ட செய லாளர் மா. கணேசன், புறநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜா. நரசிம்மன், ம. பாலசுப்பிரமணி யம், வை. ஸ்டாலின், ஆர். சசிகலா, டி. செல்வராஜ், மேற்கு - 1 ஆம் பகுதிக்குழு செயலாளர் கு. கணே சன், வடக்கு - 1 பகுதிச் செயலாளர் வி. கோட்டைச்சாமி, மேற்கு ஒன்றி யச்செயலாளர் பி. ஜீவானந்தம் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் அரசு துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.