மதுரை, ஏப்.12- மதுரை நாடாளுமன்ற தொகுதி மேற்கு சட்டப் பேரவைத் தொகு திக்கு உட்பட்ட திருப்பரங்குன்றம் ஒன்றியப் பகுதிகளில் நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஏப்ரல் 12 புதனன்று மக்களைச் சந் தித்து குறைகளை கேட்டறிந்தார். புதுக்குளம் 1பிட், சம்பக்குடி, வேலுச்சாமி நகர், அச்சம்பத்து, துவரிமான், கீழ மாத்தூர், மேல மாத்தூர், காமாட்சிபுரம், கொடி மங்கலம், புதூர் வழியாக மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. மக்களின் குறைகளை கேட்டறிந்து, உடனடியாக தீர்வுகாண முடிந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகண்டார். சாலை வசதி, குடி தண்ணீர் வசதி, பாசன வசதி, மற்றும் மாற்றுத்திற னாளிகள், முதியோர் உதவித் தொகை ஆகியவற்றை அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளிடம் பேசி பிரச்சனைகளை நிவர்த்தி செய் தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மறைந்த தலைவர் பொ. மோகன் நாடாளுமன்ற உறுப்பி னராக இருந்தபோதுபுதுக்குளம் 1பிட் மற்றும் சம்பக்குடி கிராமப் பகுதிகளில் போடப்பட்ட நெற்கதிர் அடிக்கும் களத்தை மாரமத்து செய் யுமாறு கோரிக்கை வைத்தனர். வட்டார வளர்ச்சி அலுவலரை அழை த்து உடனடியாக களத்தினை மரா மத்து செய்துதரும்படி உத்தர விட்டார். மேலும் இரண்டு மாதங்க ளுக்குள் புதிய சாலை அமைத் துத்தர வேண்டும் என்று கூறினார் .இரண்டு மாதங்களில் கட்டாயமாக அமைத்துத்தருவதாக அதிகாரி கள் ஒப்புக் கொண்டனர். புதுக்குளம் துவக்கப்பள்ளியில் சேதமடைந்த சமையலறை கட்டி டம் இடிக்கப்பட்டு, பல மாதங்கள் ஆகியும், புதிய கட்டிடம் கட்டப்பட வில்லை. விரைவில் இதனை கட்டி முடித்துத்தர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சு.வெங்கடேசன் எம்.பி., உத்தரவிட்டார். கட்டிடம் கட்டுவதற்கான வேலை நடந்து வருகிறது. விரைவில் முடிந்து விடும் என்று அதிகாரிகள் பதில ளித்தனர். கீழ மாத்தூர் மயானத்திற்கு பாதை கேட்டு மனு அளித்தனர். பாதை ஏற்பாடு செய்து தருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். காமாட்சிபுரம் துவக்கப்பள்ளி ஓட்டு கட்டிடத்தில் இயங்கி வரு கிறது. அதனை மராமத்து செய்து தரும்படி தலைமை ஆசிரியர் மற் றும் ஆசிரியர்கள், ஊர் பொதுமக் கள் சார்பில் மனு அளித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் மற் றும் அதிகாரிகளை அழைத்து இந்த மாத இறுதிக்குள் பள்ளியினை மரா மத்து செய்து தரும்படி கேட்டுக் கொண்டார்.
பேருந்து இயக்க உடனடி ஏற்பாடு
இதே காமட்சிபுரம் கிராமத்தில் பேருந்து வசதி காலை மாலை மட் டுமே உள்ளது. அதுவும் காலை 7மணிக்கு பேருந்து சென்று விடு வதாகவும் இதனால் பள்ளி கல்லூரி மாணவர்கள், மதுரை அரசு மருத்து வமனை, மாவட்ட ஆட்சியர் அலு வலகம் செல்லக்கூடிய வகையில் மாட்டுத்தாவணியில் இருந்து காமாட்சிபுரத்திற்கு காலை 8மணி முதல் 8.30 மணிக்குள்ளாகவும் அதே நேரத்தில் மாலை பள்ளி கல் லூரிகள் நிறைவு பெறும் நேரத்தில் ஒரு பேருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் உடனடியாக அரசு போக்குவரத்து அதிகாரிகளை தொடர்பு கொண்டு கிராமத்திற்கு பேருந்து வசதி ஏற்படுத்தித்தரு மாறு கேட்டுக் கொண்டார். உட னடியாக பேருந்து இயக்க நட வடிக்கை எடுத்த சு.வெங்கடேசன் எம்.பி.க்கு மக்கள் நன்றி தெரிவித் தனர். காமாட்சிபுரம் கிராமத்தை சுற்றி பெரிய கண்மாய், சின்ன கண் மாய்களில் தண்ணீர் நிரப்ப கால் வாய் இருந்தும் தண்ணீர் வர முடி யாமல் உள்ளது. எனவே அதனை சரி செய்ய வேண்டும் என கேட் டுக்கொண்டனர்.
பொதுப்பணித்துறை அதிகாரி களை தொடர்பு கொண்ட சு. வெங்கடேசன் எம்.பி. உடனடியாக தண்ணீர் செல்வதற்கு கால்வாய் களை தூர்வார வேண்டும். பெரிய கண்மாயை தூர்வாரி தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றும் உத்தரவிட்டார். 100 நாள் தொழிலாளர்களுக் காக தொடர் போராட்டம் 100 நாள் வேலை பார்க்கும் தொழிலாளர் களை சந்தித்துப் பேசினார். அப் போது அவர்கள் கூறுகையில், வரு டத்திற்கு பத்து நாள் அல்லது 15 நாள் மட்டுமே வேலை வழங்கப்படு கிறது. நூறு நாளும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பின்னர் தொழிலாளர்களிடம் சு. வெங்கடேசன் எம்.பி.,பேசுகை யில், 100 நாள் வேலையை 150 நாளாக உயர்த்தக் கோரி நாடாளு மன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் மோடி அரசு காதில் வாங்கிக் கொள்ளாமல் 100 நாள் வேலையை 50 நாளாக குறைக்கச் சொல்லுகிறது. இந்த திட்டத்திற்கான நிதியை குறைத்து விட்டது. ஆனாலும் தொழிலா ளர்களின் கோரிக்கைக்காக தொடர்ந்து போராடுவோம் என்று கூறினார்.
துவரிமான், கீழமாத்தூர் , மேல மாத்தூர், காமாட்சிபுரம் மற்றும் கிராம பகுதிகளில் காவிரி கூட்டு குடி நீர் திட்ட குடிதண்ணீர் சரியாக வரு வதில்லை என புகார் தெரிவித்த னர். இதுகுறித்து காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட அதிகாரியிடம் கேட்ட றிந்தார். தண்ணீர் குறைவாகத்தான் வருகிறது என்று அதிகாரி பதில ளித்தார். தண்ணீர் முறையாக கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று சு. வெங்கடேசன் எம்.பி. கூறினார். முதியோர் மற்றும் மாற்றுத்திற னாளிக்கான உதவித்தொகை கேட்டு கோரிக்கை வைத்தனர். இது குறித்து அதிகாரிகளிடம் முறை யாக ஆய்வு செய்து தகுதி உள்ள அனைவருக்கும் எந்தவித நிபந் தனை இன்றி உதவித் தொகையை நிறுத்தாமல் வழங்க வேண்டும் என்று கூறினார். இவ்வாறு உடனடியாக தீர்க்க முடிந்த பிரச்சனைகளை உடனடி யாக தீர்த்து வைத்தது பொது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற் படுத்தியது. இந்த மக்கள் சந்திப்பு பயணத் தில் மதுரை மாவட்ட கூடுதல் ஆட்சி யர் சரவணன், மேற்கு வட்டாட்சி யர் முருகன் வட்டார வளர்ச்சி அலு வலர் கீதா, வட்டார வளர்ச்சி உதவி பொறியாளர் லியோ, வேளாண் உதவி இயக்குனர் மீனாட்சி சுந்த ரம், ஊராட்சி தலைவர்கள்.துணைத் தலைவர்கள், செயலர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாநிலக்குழு உறுப்பி னர் எஸ்.பாலா, மாவட்டச் செயற் குழு உறுப்பினர் பா.ரவி, திருப்ப ரங்குன்றம் தாலுகாச் செயலாளர் எம்.ஜெயக்குமார், மாவட்ட குழு உறுப்பினர் கண்ணன், அய்யாவு, அசோக், உட்பட பலர் கலந்து கொண்டனர். கலைஞரின் அனைத்து கிராம வேலை வாய்ப்பு வளர்ச்சி திட்டத் தின் மூலம் மானிய விலையில் தார்ப்பாய், நாற்று நடவு இயந்தி ரம், மரக்கன்றுகள் ஆகியவற்றை மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் வழங்கினார்.