மதுரை, ஜூலை 6- மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த தோழர் ராசு காலமனார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர், வாடிப்பட்டி தாலுகா செயலாளர், வாடிப் பட்டி ஒன்றியக்குழுச் செய லாளராக பொறுப்பு வகித்த தோழர் ராசு உடல்நலக்குறை வால் கோயம்புத்தூரில் புத னன்று காலமானார். தோழர் கே.இராசு இளம் வயதிலேயே தம்மை கட்சி யில் இணைத்துக்கொண் டார். மாவட்டக்குழு செயலா ளராக ஏ.லாசர் பொறுப்பு வகித்த காலத்தில் அவரு டன் இணைந்து வாடிப்பட்டி தாலுகாவில் கட்சிக்கிளை களை உருவாக்குவதில் முக் கியப்பங்காற்றினார். மறைந்த தோழர்கள் கே.எம்.கணபதி, கே.தேவ ராஜ், ஏ.போஸ், கே.கந்தசாமி மற்றும் உ.ச.உலகப்பா ஆகி யோருடன் இணைந்து வாடிப்பட்டி தாலுகாவில் விவசாயிகள் சங்கம், விவசா யத் தொழிலாளர்கள் சங் கத்தை கிராமங்களில் உரு வாக்கியவர்களில் ஒருவர் கே.ராசு. அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை தொடர்ந்து இயக்க வேண் டும். ஆலைத் தொழிலாளர் களைப் பாதுகாப்பதற்காக கட்சியின் சார்பில் நடை பெற்ற போராட்டங்களுக்கு தலைமையேற்றுள்ளார். வாடிப்பட்டி பேரூராட்சி யில் தற்போது செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனை களை தரம் உயர்த்துவதற்கு இவர் தலைமையில் பல போராட்டங்களை கட்சி நடத்தியுள்ளது. சோழவந் தான் பகுதி வெற்றிலை விவ சாயத்தை பாதுகாப்பதற் கும், தென்னை விவசா யத்தை பாதுகாப்பதற்கும் விவசாயிகள் சங்கம் நடத் திய போராட்டத்தில் முக்கி யப் பங்காற்றியவர் தோழர் கே.ராசு. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டக்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது என மாவட்டச் செயலாளர் கே.இராஜேந்தி ரன் புதனன்று வெளியிட் டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். ராசு மறைவிற்கு கட்சியின் மூத்த தலைவர் சி.ராமகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.