districts

மதுரை முக்கிய செய்திகள்

மதுரை புறநகர்: விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய கோரிக்கை மாநாடுகள் 

மதுரை, நவ.19- அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் திருப்ப ரங்குன்றம் ஒன்றிய கோரிக்கை மாநாடு கே.பி.ஜானகி யம்மாள் அரங்கித்தில் சனிக்கிழமையன்று நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் எஸ்.டி. தீத்தாராப்பன் தலைமை வகித்தார். மாவட்டத்  தலைவர் வி. உமாமகேஸ்வரன் துவக்கி வைத்துப் பேசினார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பரங்குன்றம் தாலுகாச் செயலாளர் எம்.ஜெயகுமார், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் இராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்டச்  செயலாளர் சொ. பாண்டியன் நிறைவுரையாற்றினார். மாநாட்டில் ஒன்றி யத் தலைவர் எம்.ரமேஷ்,  ஒன்றியச் செயலாளராக ம.தெய்வேந்திரன், ஒன்றியப் பொருளாளராக  எஸ்.டி.  தீத்தாராப்பன், துணைச் செயலாளர் திருஞானசம்பந்தம், துணைத் தலைவர் பஞ்சவர்ணம் ஆகியோர் உட்பட 12 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்ப்பட்டது. திருப்பரங்குன்றம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி களில் 100நாள் வேலையை முழுமையாக வழங்கி சட்டக்  கூலி 281முழுமையாக வழங்க வேண்டும்.  வீடு இல்லாத  அனைவருக்கும், வீடுகட்ட 5 லட்சம் மானியம் வழங்கிட  கோரியும், 60வயது முடிந்த விவசாயத் தொழிலாளர் களுக்கு மாதம் ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன  உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

உசிலம்பட்டி 

அகில இந்திய விவசாய த் தொழிலாளர்கள் சங்கத்தின் உசிலம்பட்டி ஒன்றிய 10வது மாநாடு உசிலம்பட்டியில் நடைபெற்றது . மாவட்ட தலைவர்  வி.உமாமகேஸ்வரன்  துவக்கி வைத்து பேசினார் .மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உசிலம்பட்டி ஒன்றியச் செயலாளர் பெ.ராமர் ,விவ சாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் எம். அறிவு , வி.குமார சாமி, விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மமாவட்ட பொரு ளாளர் ஜெ.காசி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்ட செயலாளர் சொ.பாண்டியன் நிறைவு செய்து பேசி னார். ஒன்றிய தலைவராக வி.எம்.எஸ்.மார்க்கண்டன், ஒன்றிய செயலாளராக எம். அறிவு,பொருளாளராக எஸ்.  சங்கிலி,  துணைத்தலைவராக வி.பாலு, துணைச்செய லாளராக பாண்டியம்மாள் மற்றும் 12 பேர் கொண்ட ஒன்றிய குழு தேர்வு செய்யப்பட்டது.

கல்லுப்பட்டி

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் டி. கல்லுப்பட்டி ஒன்றிய 10வது மாநாடு  வன்னி வேலம்பட்டி யில் ஒன்றிய தலைவர் ஜி.நாராயணன் தலைமையில் நடை பெற்றது. மாவட்ட பொருளாளர் ஜே.காசி துவக்கி வைத்து  பேசினார். மாநாட்டை வாழ்த்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் வி.சமையன் பேசினார்.  ஒன்றியத் தலைவராக பி. முருகன், ஒன்றிய செய லாளராக பி.முருகன் பி.ஆறுமுகம், பொருளாளராக ஜி. நாராயணன் துணைத் தலைவராக தொந்தி கணேசன்,  துணைச் செயலாளராக முனிசாமி ஆகியோர் உட்பட 12 கொண்ட ஒன்றிய குழு தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டை நிறைவு செய்து மாவட்ட செயலாளர் சொ.பாண்டியன் பேசினார்.

ஆட்டோ மோதி இளைஞர் பலி

சின்னாளபட்டி, நவ.22- திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள  குண்டலபட்டி பிரிவை சேர்ந்தவர் தினேஷ் குமார் (22) .இவர் சிறுநாயக்கன்பட்டி பகுதியில் விளையாட்டுப் பொருட்கள் விற்கும் கடை வைத்து நடத்தி வந்தார்.  இவர் விளாம்பட்டியிலுள்ள தனது உறவினர் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு மீண்டும் குண்ட லப்பட்டிக்கு திரும்பிவந்தார். நாட்டார்பட்டி பிரிவில் விளாம்பட்டியை நோக்கி சென்ற ஆட்டோ மோதியதில் படுகாயமடைந்த தினேஷ்குமார் நிலக்கோட்டை அரசு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்  சிகிச்சைக்காக திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ் குமார் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து விளாம்பட்டி காவல்துறை ஆய்  வாளர் வனிதா வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்  கொண்டுள்ளார்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 10 வருடம் சிறை 

திருவில்லிபுத்தூர், நவ.22- விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள  ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்  அன்பழகன் (வயது 22).   கூலி தொழிலாளி .இவர் அதே ஊரைச் சேர்ந்த 15 வயது   சிறுமியை 9- 1 -2017 அன்று வீடு புகுந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பினர் திரு வில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு  செய்து அன்பழகனை கைது செய்தனர். திருவில்லி புத்தூரில் சிறார் பாலியல் குற்றத்தடுப்பு அமர்வு சிறப்பு நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கினை விசாரித்த நீதிபதி கே பூரண ஜெய ஆனந்த், குற்றம் சாட்டப்பட்ட அன்பழகனுக்கு 10 வருடங்கள் சிறை தண்டனையும் ரூ. 6 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.  மேலும் தமிழக அரசு பாதிக்கப்பட்ட சிறு மிக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் தொகை வழங்க உத்தர விட்டார் இந்த வழக்கில் அரசு தரப்பில் சு குற்றவியல் வழக்கறிஞர் ஜெ.கலா ஆஜரானார்.

செல்போன் டவர் மாயம்!

இராஜபாளையம், நவ.22-  இராஜபாளையம் அருகே சேத்தூர் - முகவூர் செல்லும் ரோட்டில் முருகானந்தம் என்பவருக்கு சொந்தமான இடத்தில் தனியார் கம்பெனி செல்போன் டவர் அமைத்திருந்தது.  இந்நிலையில் செல்போன் கம்பெனி திவாலாகியதால் செல்போன் சேவையை தொடர இயலாமல் டவர் செயல்படாமல் கிடந்துள்ளது. டவர் அமைக்க இடம் கொடுத்த முருகானந்தத்திற்கு டிசம்பர் 2017 வரை வாடகை கொடுத்து அதன்பின் வாடகை கொடுக்காமல் செல்போன் டவரை பராமரிக்காமலும் இருந்துள்ளனர். அதன்பின் 2020 ல் டவ ருக்கு எலெக்ட்ரிசியன் நியமித்து டவரை பராமரிக்க சென்னை புரசை வாக்கம் பகுதியைச் சேர்ந்த முத்துவெங்கடகிருட்டிணன் (52) நியமிக்கப்  பட்டுள்ளார். இவர் இங்கு வந்து டவரை பார்த்த போது டவரை காணவில்லை,  இது குறித்து கம்பெனிக்கு தகவல் கொடுத்துள்ளார், கம்பெனி சார்பில் ரூ.26 லட்சம் மதிப்புள்ள மின் சாதனப் பொருள்கள் காணா மல் போனதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ராஜபாளையம குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு செய்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் சேத்தூர் காவல் துறையினர் விசாரிக்கின்றனர்.

தோழர் கே.பாண்டி காலமானார் 

மதுரை,நவ.22- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மேலூர் தாலுகா ஏழைகாத்த அம்மன் நகர் கிளை உறுப்பினர் கே.பாண்டி (80) திங்களன்று இரவு காலமானார்.  அவரது மறைவு செய்தி அறிந்து கட்சியின் மேலூர்  தாலுகா செயலாளர் எம். கண்ணன் மற்றும் தாலுகாக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர் மற்றும் பலர் மாலை யணிவித்து, அஞ்சலி செலுத்தினர். இறுதி நிகழ்ச்சி செவ்வாயன்று மாலை நடைபெற்றது.

வைகை அணை நீர்மட்டம்  69 அடியாக குறைவு 

தேனி, நவ.22- நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாத நிலையில் நீர்வரத்து குறைந்து விட்ட நிலையில் வைகை அணை யின் நீர்மட்டம் 69 அடியாக குறைந்துவிட்டது. வைகை அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரண மாக முழு கொள்ளளவை எட்டியது. அணையின் நீர்மட்டம் 70 அடிக்கு மேல் சென்றபோது தேனி, திண்டுக்கல், மதுரை,  இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட பாசனத்திற்காக கூடு தல் தண்ணீர் திறக்கப்பட்டது. சுமார் 10 ஆயிரம் கன  அடிக்கு மேல் தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில் அதன்பிறகு மழை நின்றதால் நீர்வரத்தும் படிப்படியாக குறைந்தது. தற்போது வடகிழக்கு பருவமழை தீவி ரம் அடையும் என எதிர்பார்த்த நிலையில் தேனி மாவட்டத்  தில் கடும் பனிப்பொழிவே நிலவி வருகிறது.  செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி வைகை அணை நீர்மட்டம் 68.83 அடியாக உள்ளது. வரத்து 682 கன அடி. திறப்பு 1819 கன அடி. இருப்பு 5529 மி.கன அடி.  அதேபோல் முல்லைப்பெரியாறு அணைக்கும் நீர்வரத்து குறைந்து வருவதால் அணையின் நீர்மட்டம் 140 அடியை  எட்டுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. தற்போது அணை யின் நீர்மட்டம் 138.30 அடியாக உள்ளது. வரத்து 522 கன  அடி. திறப்பு 511 கன அடி. இருப்பு 6698 மி.கன அடி. மஞ்ச ளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி. வரத்து 100 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.35 அடி.  வரத்து 42 கன அடி. இந்த 2 அணைகளும் முழு கொள்ள ளவை எட்டி இருப்பதால் அணைக்கு வரும் தண்ணீர் முழு வதும் வெளியேற்றப்படுகிறது.

போடியில் நகராட்சி பயணியர் தங்கும் விடுதி  காணொலி மூலம் முதல்வர் திறந்துவைத்தார்

தேனி, நவ.22- போடியில் நகராட்சி பயணியர் தங்கும் விடுதியை காணொலிக் காட்சி மூலம் முதல்வர்  மு.க.ஸ்டாலின் திறந்து வைத்ததை தொடர்ந்து தேனி ஆட்சியர் பார்வை யிட்டார். தமிழ்நாடு  முதல்வர்  ஸ்டாலின்   சென்னை, தலைமைச்  செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம்  செவ்வாய்க்கிழமை  போடிநாயக்கனூர் நகராட்சிக்கு உட்பட்ட சுப்புராஜ் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பயணி யர் தங்கும் விடுதியினை திறந்து வைத்தார் .அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்  க.வீ.முரளீதரன், பெரிய குளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார்  முன்னிலையில் குத்துவிளக்கேற்றி வைத்து, பார்வை யிட்டார். இந்நிகழ்வின் போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர் தங்க தமிழ்ச்செல்வன், போடிநாயக்கனூர் நகராட்சி  நகர்மன்ற தலைவர் எஸ்.ராஜராஜேஸ்வரி, துணைத் தலைவர் கிருஷ்ணவேனி, நகராட்சி பொறியாளர் செல்வ ராணி, வார்டு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். போடிநாயக்கனூர் நகராட்சிக்குட்பட்ட சுப்புராஜ் நகரில் நூற்றாண்டு நிறைவு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி மதிப்பீட்டில் பயணியர் தங்கும் விடுதி, புதுத்தெருவில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் தினசரி சந்தை, மயானத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் தியான மண்டபம், கம்பம் நக ராட்சி பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.4.10 கோடி மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள கசடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மேலச்சொக்க நாதபுரம் பேரூராட்சியில் ரூ.41.72 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பாதாளச் சாக்கடை திட்டப்பணி ஆகிய முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார்.

3 ஆவது மாடியிலிருந்து விழுந்த மாணவி தனியார் பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்ப  உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, நவ. 22-  திண்டுக்கல் தனியார்  பள்ளியின் 3வது மாடியிலி ருந்து மாணவி கீழே விழுந்த  வழக்கில் சம்பந்தப்பட்ட பள் ளிக்கு நோட்டீஸ் அனுப்ப  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ரத்தி னம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொது நல வழக்கினை தாக்கல் செய்  திருந்தார். அதில், “கடந்த அக்டோ பர் 17ஆம் தேதி திண்டுக்கல் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயின்ற 11ஆம்  வகுப்பு மாணவி பள்ளியின் 3வது மாடியில் இருந்து கீழே விழுந்ததில், முதுகெலும்பு முறிவு ஏற்பட்டது.  இது தொடர்பாக பள்ளி யின் தாளாளரை தொடர்பு கொண்ட போது மழை கார ணமாக விடுதியின் தரை  வழுக்கியதாகவும், அத னால் மாணவி கீழே விழுந்து  விட்டதாகவும் குறிப்பிட்டார். ஆனால், தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் மாண வியின் தாயார் அளித்த புகா ரில் மாணவி மூன்றாம் மாடி யில் இருந்து கீழே விழுந்த  நிலையில் இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்ததாக கூறுமாறு பள்ளி நிர்வாகம் வற்புறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். மாணவிக்கு முறையான இழப்பீடும் வழங்கப்பட வில்லை. ஆகவே, திண்டுக் கல் தனியார் பள்ளியின் மூன்  றாம் மாடியிலிருந்து கீழே விழுந்ததில், முதுகெலும்பு முறிவு ஏற்பட்ட மாணவிக்கு 10 லட்ச ரூபாயை இழப்பீ டாக வழங்க உத்தரவிட வேண்டும். பள்ளி நிர்வாகம் தரப்பிலும் மாணவிக்கு 10  லட்ச ரூபாய்க்கு குறையா மல் இழப்பீடு வழங்க உத்த ரவிட வேண்டும்.” என்று கூறி யிருந்தார். இந்த வழக்கின் விசா ரணை நீதிபதிகள் மகா தேவன், சத்யநாராயண பிர சாத் அமர்வு முன்பு செவ்வா யன்று நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், மாணவியின் நிலை தற் போது எவ்வாறு உள்ளது என கேள்வி எழுப்பினர். மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரு வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி கள், வழக்கு குறித்து தமிழ் நாடு பள்ளிக் கல்வித் துறைச் செயலர், தமிழக காவல் துறை தலைவர் ஆகியோர் விரிவான பதில் அளிக்கவும் சம்பந்தப்பட்ட பள்ளிக்கும் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.

மானாமதுரையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு 4 கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து

சிவகங்கை, நவ.22- மானாமதுரையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு 4 கண்  மாய்களுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மானாமதுரை ஒன்றிய பொருளாளர் காசிராஜன் கூறுகையில், சிவகங்கை மாவட்டத்தில் பெரும் பாலான கண்மாய்களில் போதுமான அளவிற்கு தண்  ணீர் நிரம்பியுள்ளது. வைகை  ஆற்றில் கடந்த ஆறு மாத  காலமாக தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. குறிப் பிட்ட சில கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லாத நிலை உள்ளது. இதுகுறித்து தமிழ்  நாடு விவசாயிகள் சங்கத் தின் சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்  தில் மாவட்ட ஆட்சித் தலை வர் மதுசூதன் ரெட்டியிடம் முறையிட்டோம். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்ட செயலாளர் தண் டியப்பன், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வீரபாண்டி மற்றும் கிராம பெரியவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முறை யிட்டு வாதாடினோம். அவ ரது உத்தரவால் பொதுப் பணித்துறை அதிகாரிகள் முன்முயற்சியால் தற்போது அதற்கான வழிவகையை ஏற்பட்டுள்ளது. அதாவது வைகை ஆற்றில் இருந்து  ஒரு கால்வாய் செல்கிறது. தூந்துபோன கால்வாயை சரி செய்து அந்த கால்வாய் வழியாக தற்போது தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.பொதுப்பணித்துறை அதி காரிகளுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரி வித்தார்.