districts

img

நாகமலையில் தமுஎகச கலை இலக்கிய இரவு

மதுரை, ஆக.17- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் மதுரை நாக மலை புதுக்கோட்டை கிளை  சார்பில் 27-ஆவது கலை இலக்கிய இரவு விழா திங்க ளன்று நடைபெற்றது.  இந்நிகழ்விற்கு வரவேற்  புக்குழு தலைவர் பி.கே.பெரி யசாமிராஜா தலைமை வகித்  தார். கிளைச் செயலாளர் செந்தில்ராஜா குருசாமி வர வேற்றார். மாவட்டச் செயலா ளர் மீ.லெனின் துவக்கி வைத்துப் பேசினார். மாவட் டத் தலைவர் வெண்புறா, மாவட்டப் பொருளாளர் இரா.  இராமகிருஷ்ணன் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர்.  தமுஎகச மாநிலக்குழு உறுப்பினர் க.பிரேமலதா, மதுரை காமராஜர் பல்க லைக்கழக பதிவாளர் (பொ)  முனைவர் எம்.இராம கிருஷ்ணன், சிஇஓஏ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளா ளர் மை.ராஜா கிளைமேக்ஸ், கபி கல்வியியல் கல்லூரி தலைவர் ஆறுமுகம் ஆகி யோர் பல்வேறு போட்டி களில் பங்கெடுத்து வெற்றிப் பெற்ற மாணவ, மாணவி களுக்கு பரிசுகளை வழங்கி னர்.  விருது பெற்றவர்களுக்கு பாராட்டு  பாலபுரஷ்கார் விருது பெற்ற தமுஎகச மாநிலத் துணைச் செயலாளர் உதய சங்கர், மலேசியா உலக  தமிழ் ஆராய்ச்சி மையத்தில் விருது பெற்ற தமுஎகச நகர் மாவட்டக்குழு உறுப்பினர் மதுரை நம்பி ஆகியோரை தமுஎகச மதிப்புறு தலை வர் ச.தமிழ்ச்செல்வன் பாராட்டி உரையாற்றினார். மாநிலத் தலைவர் மதுக்கூர்  ராமலிங்கம், மாநிலச்  செயற்குழு உறுப்பினர்  பேரா.சுந்தரவள்ளி ஆகி யோர் கருத்துரையாற்றினர்.  கரிசல் கருணாநிதி குழு வினர் மற்றும் பசுமலை செல்வம் ஆகியோரின் பாடல்கள், நாகமலை பகத்சிங் கலைக்குழு ஆட்  டக்கலைகள், திருவில்லி புத்தூர் கோடாங்கி கலைக்  குழுவினரின் கலை நிகழ்ச்சி கள் என பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றன.  முன்னதாக நடைபெற்ற கலை இலக்கிய பேரணி யை காமராஜர் பல்கலை ஆட்சிக்குழு உறுப்பினர் எஸ்.புஷ்பராஜ் துவக்கி வைத்தார். தமுஎகச மாவட்ட நிர்வாகிகள் மற்றும்  பல்வேறு நலச் சங்கங்க ளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். தமு எகச கிளைப் பொருளாளர் ம.தேவேந்திரன் நன்றி கூறி னார்.