மதுரை, மே 24- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை மாநகர் மேற்கு - 1 ஆம் பகுதிக்குழு பெத்தானியாபுரம் பகுதி பாண்டியராஜபுரம் - 2 கிளைச் செயலாளரும், அரசு போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் உறுப்பினருமான தோழர் எஸ். எம். சங்கிலி பாண்டி புதனன்று காலை காலமானார். இவர், பெத்தானியாபுரம் பகுதியில் கட்சியை வளர்ப்ப தற்கு பெரும் பங்கு வகித்தவர். தோழரது மறைவு செய்தி அறிந்து கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு. வெங்க டேசன், மாவட்ட செயலாளர் மா. கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், பகுதிக்குழு செயலாளர் கு.கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜா. நர சிம்மன், அ.ரமேஷ், இரா.லெனின், எம். பாலசுப்பிரமணி யம் டி. செல்வா மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல், மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் பி. வீரமணி மற்றும் தோழர்கள் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.