மதுரை மாநகராட்சி 31 வது வார்டு தல்லாகுளம் பெருமாள் கோவில் அருகில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ 5 லட்சத்தில் உயர் மின்கோபுரம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி புதனன்று நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜா. நரசிம்மன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி. ராதா, மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல், மற்றும் 31 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் முருகன், குடியிருப்போர் நலசங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.