districts

img

மதுரை மேலூர் மேம்பாலம் -சாலைப் பணிகளை சு.வெங்கடேசன் எம்.பி. ஆய்வு

மேலூர் அரசு கல்லூரியில்  ரூ.30 லட்சத்தில் உணவருந்தும் கூடம்  

சு.வெங்கடேசன் எம்.பி. வாக்குறுதி

மேம்பாலம்- சாலைப்பணிகள் ஆய்வை முடித்துவிட்டு மதுரை  மேலூர் அரசு கல்லூரியில் மாணவ, மாணவிகளை சந்தித்து, கோரிக்கைகளை கேட்டறிந்தார். பின்னர் சு.வெங்கடேசன் எம்.பி. கூறுகையில், தொகுதி மேம்  பாட்டு நிதியில் ரூ.30 லட்சம் மதிப்பில் கல்லூரிக்கு உணவருந்தும்  கூடம் கட்டித்தர உறுதி அளிக்கிறேன் .போட்டித் தேர்வுக்கு  மாணவ  மாணவிகள் மரத்தடியிலும், மாநகராட்சி பூங்காவிலும் படித்து  வந்தனர். அதனை கவனத்தில் எடுத்து கொண்டு ரூ.70லட்சம் மதிப்  பீட்டில் போட்டித் தேர்வுக்கு படிக்கின்ற மாணவ மாணவிகளுக்கு பயன் பெறும் வகையில் கட்டிடம் கட்டித்தரப்பட்டுள்ளது. அதே போல் மேலூர் பகுதி மாணவ, மாணவிகள் பயன் பெறும் வகை யில் கட்டிடம் கட்டித்தர முயற்சிக்கிறேன் என்றார்.

மதுரை, பிப்.22-  மதுரை மக்களவை உறுப்பினர்  சு. வெங்கடேசனின்  தொடர் முயற்சி யால் மேலூர் பகுதி மக்களின் நீண்ட  நாள் கோரிக்கையான மேலூர் சூர குண்டு முனிகோயில் மேம்பாலம், மேலூர் சர்வீஸ் ரோடு, கருங்காலக் குடி மேம்பாலம், அய்யாபட்டி  பிரிவு அருகே உள்ள தேசிய நெடுஞ் சாலையில்  மேம்பாலம், வலைசேரி பட்டி பிரிவு மற்றும் ஒத்தக்கடை ராஜ கம்பீரம் அருகே பாலம் ஆகிய வற்றின் பணிகளை சு.வெங்க டேசன் எம்.பி.,  செவ்வாய்க்கிழமை யன்று ஆய்வு மேற்கொண்டார். இதில் தேசிய நெடுஞ்சாலை துறை  ஆணையம் திட்ட இயக்குனர் எம். கணேஷ்குமார், ஆலோசனைக் குழுத் தலைவர் எஸ்.இராமச்சந்தி ரன், குடிரியுமை பொறியாளர் பெ. விஜய் ஆனந்த், பொறியாளர் கே. கார்த்திகேயன், ஒப்பந்தகாரர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநி லக்குழு உறுப்பினர் எஸ்.பாலா, மேலூர் தாலுகாச்  செயலாளர் எம். கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பாலம் வருவதற்கு தொடர் முயற்சி செய்து ஒன்றிய அமைச்சரிடம்  இருந்து ஆணை பெற்றுத்தந்த மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கு வலைச்சேரிபட்டி கிராம மக்களின்  சார்பில் ஊராட்சி மன்ற தலைவி  சக்தி பிரியா கண்ணன் முன்னிலை யில் மாலை அணிவித்து நன்றி யினை தெரிவித்தனர். பின்ன்ர செய்தியாளர்களிடம் சு. வெங்கடேசன் எம்.பி., பேசுகை யில்,  மதுரை திருச்சி பிரிவில் தொடர்ச்சியாக விபத்துக்கள் அதி கம் நடைபெறுவதை கணக்கெ டுத்து ஒன்றிய சாலைப்போக்கு வரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியின்  கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இச்சாலையில் பாலம் இணைப்புச்சாலை கேட்டு பெற்றுள்ளோம்.  கடந்த நான்கு வருடத்தில் நான்கு பாலங்கள் கேட்டு பெற்று இந்த வேலைகள் நடைபெற்று வருகிறது.  

அதன் ஒரு பகுதியாக வலைச்சேரிபட்டி 4  வழிச் சாலையில் ஏற்பட்ட அதிகப்  படியான விபத்துகள் நிகழ்வுகளா லும், ஒத்தக்கடையில் இணைப்பு சாலை தேவை என கேட்டு கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது நேரடியாக ஒன்றிய அமைச்  சரிடம் வலியுறுத்தினோம். மகிழ்ச்சி யோடு அதற்கான ஆணையை  தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணை யம் அனுப்பி உள்ளது. இதுவரை  ரூ.80 கோடி மதிப்பில் பணிகளுக்கு நெடுஞ்சாலைத்துறையால் ஒதுக் கீடு செய்துள்ளது. அமைச்சருக்கு நன்றியை தெரிவித்து கொள் கின்றேன் என்றார். மேலும் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், டுட்டோரியலை எந்த வகையிலும்  நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் அவர்கள் மக்களை குறைத்து மதிப்பிட்டுள்ளார்கள். நீங்கள் எங்களை தோற்கடித்தா லும் பரவாயில்லை. பிரதமர் எங் களை பாஸ் போட்டு ஆளுநர் ஆக்கிவிடுவார் என்பது மக்களின் தீர்ப்பை மதிக்கும் பேச்சா?   ஆளு நரின் பதில் ஆளுநரின் பதிலாக இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். அந்தளவிற்கு தரம் குறைந்து அவர் பேசி இருக்க வேண்டாம். அதேபோல் பதிலை என்னிடம் எதிர்பார்த்தால் அவர் நிச்சயம்  ஏமாற்றம் தான் அடைவார்.  தில்லி ஜவஹர்லால் நேரு பல்க லைக்கழகத்தில்   பெரியார், மார்க சிய மற்றும் நவீன  சிந்தனைகளை முன்னெடுப்பவர்கள் மீது குறி வைத்து தாக்குதல் நடத்துவது கண்டனத்துக்குரியது. உரிய நட வடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.