districts

img

மதுரை மாநகராட்சி  28 ஆவது வார்டு மக்களின் அடிப்படை பிரச்சனை

மதுரை மாநகராட்சி  28 ஆவது வார்டு மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் வடக்கு - 1 ஆம் பகுதிக்குழு சார்பில்  சனிக்கிழமையன்று கோரிப்பாளையம் பள்ளிவாசல் அருகில் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. கிளைச் செயலாளர்  அர்ச்சுணன் தலைமை வகித்தார். பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார், மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன், மாவட்டச் செயலாளர் மா.கணேசன் ஆகியோர் உரையாற்றினர். மாவட்டக்குழு உறுப்பினர்கள்  பி.ராதா. மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல், ஏ. பாலு, பகுதிக்குழு  செயலாளர் வி.கோட்டைசாமி, முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் க.திலகர், பா.பழனியம்மாள் உள்ளிட்டோர் பேசினர்.