மதுரை 23 ஆவது வார்டு தியாகி பாலு தெருவில் வடக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையினை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மண்டல தலைவர் சரவண புவனேஸ்வரி, மாமன்ற உறுப்பினர் டி.குமரவேல் முன்னிலை வகித்தனர். திமுக பகுதிச் செயலாளர் குரும்பன், வட்டச் செயலாளர் பவுன்ராஜ், துணை ஆணையாளர் வரலட்சுமி, உதவி செயற்பொறியாளர் காமராஜ், உதவி பொறியாளர் ராஜலட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.