முல்லைப்பெரியாறு அணையில் சரிந்து வரும் நீர்மட்டம்
தேனி, பிப்.16- நீர்வரத்தின்றி பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறப் பால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 123 அடியாக சரிந்துவிட்டது முல்லைப் பெரியாறு அணையில் தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் தமிழக பகுதிக்கு 678 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. ஆனால் 91 கனஅடிநீர் மட்டுமே வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வரு கிறது. வியாழனன்று காலை நிலவரப்படி 123.30 அடியாக உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 55.12 அடியாக உள்ளது. 432 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 769 கன அடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 45.95 அடியாக உள்ளது. 37 கனஅடிநீர் வருகிறது. 75 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணை யின் நீர்மட்டம் 72.43 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 25 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.
கேரளாவிற்கு கஞ்சா கடந்திய பெண் உட்பட 3 பேர் கைது
தேனி, பிப்.16- ஆந்திரவிலிருந்து கம்பம் வழியாக கேரளாவிற்கு ஆட்டோவில் கஞ்சா கடத்த முயன்ற பெண் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கம்பம் மெட்டு சாலை, கம்பம் பைபாஸ் சாலை சந்திப்பில் மதுவிலக்கு காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கம்பத்தில் இருந்து கேரளா நோக்கி வேகமாக சென்ற ஆட்டோ வை மறித்து சோதனை செய்தனர். அதில் 5 கிலோ 550 கிராம் கஞ்சா கடத்தியது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் ஆட்டோவில் இருந்து ஒருவர் தப்பியோடி விட்டார். மற்ற 3 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்த னர். போலீசார் விசாரணையில் அவர்கள் கம்பம் கோம்பை சாலையை சேர்ந்த துரைப்பாண்டி மனைவி இந்திராணி (51). மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பூமிநாதன் (29), நாராயணதேவன்பட்டியை சேர்ந்த முத்தையா (39) என தெரியவந்தது. மேலும் தப்பி ஓடிய நபர் அன்பரசன் என தெரியவந்தது. அவரை தேடி வருகின்றனர்.
தேனி ஆட்சியரகத்தில் வாகனத்தில் யூபிஎஸ், பேட்டரி திருட்டு
தேனி, பிப்.16- தேனி ஆட்சியர் பல்துறை அலுவலக வளாகத்தில் நிறுத்தியிருந்த சுகாதார துறைக்கு சொந்தமான வாக னத்தில் இருந்த ரூ 48 ஆயிரம் மதிப்பிலான யூபிஎஸ் மற்றும் பேட்டரி திருடு போனதாக தேனி அல்லிநகரம் காவல்நிலை யத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனி ஆட்சியர் பல்துறை அலுவலக வளாகத்தில் சுகாதார பணிகள் இணை இயக்குநர் அலுவலகம் செயல் படுகிறது. தொழிலாளர்களுக்கான நடமாடும் மருத்துவ குழுவிற்கு அரசால் ஒதுக்கப்பட்ட வாகனம் கடந்த 10 ஆம் தேதி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது .மறுநாள் காலையில் பார்த்த போது வாகனத்தில் இருந்த ரூ 48 ஆயி ரம் மதிப்பிலான யூபிஎஸ் மற்றும் பேட்டரி காணாமல் பொய்விட்டது. இது குறித்து சுகாதார பணிகள் இணை இயக்கு நர் போஸ்கோ ராஜா தேனி அல்லிநகரம் காவல்நிலை யத்தில் புகார் அளித்தார் .அதன் பேரில் சார்பு ஆய்வா ளர் பாண்டியம்மாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.