districts

செப்.24 முதல் அக்.12 வரை மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதார முகாம்

மதுரை,செப்.23-  மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் வெளியிட்டுள்ள அறிவிப்பு வரு மாறு:  அனைத்துத்துறைகளையும் ஒன்றிணைத்து மாற்றுத்திறனாளிக ளுக்கு சிறப்பு மருத்துவ மற்றும் அலிம்கோ நிறுவனம் மூலமாக உதவி உபகரணங்கள் வழங்கு வதற்கான மதிப்பீட்டு முகாம் 24.09.2022 முதல்12.10.2022 வரை காலை 10 மணி முதல் 4 மணி வரை நடைபெறுகிறது.   இம்முகாம் மதுரை மண்டலம் 2-க்கு 24.09.2022-அன்று நரிமேட்டில் உள்ள ஓ.சி.பி.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், மதுரை மண்டலம்  3-க்கு 25.09.2022-அன்று பெரியார் பேருந்து நிலையம் அரு கில் உள்ள மதுரை கல்லூரி மேல் நிலைப்பள்ளியிலும், மண்டலம் 5-க்கு 26.09.2022-அன்று பழங்கா நத்தத்தில் உள்ள டி.வி.எஸ். மெட்ரிக்குலேசன் பள்ளியிலும்,

 27.09.2022-அன்று வாடிப்பட்டி மற்றும் அலங்காநல்லூர் ஒன்றி யம் மற்றும் பேரூராட்சி பகுதிக ளுக்கு வாடிப்பட்டியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யிலும், 28.09.2022-அன்று கொட் டாம்பட்டி ஒன்றியம் மற்றும் பேரூ ராட்சி பகுதிகளுக்கு கொட்டாம் பட்டியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 29.09. 2022-அன்று மதுரை கிழக்கு ஒன்றியத்திற்கு ஒத்தக்கடை உலகநேரியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியி லும்,மதுரை மண்டலம் 1-ற்கு  30.09.2022-அன்று திருப்பாலை யில் உள்ள யாதவா கலைக் கல்லூரியிலும், 01.10.2022- அன்று மதுரை மேற்கு ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கு மதுரை யில் உள்ள பாத்திமா கல்லூரியி லும், மதுரை மண்டலம் 4-க்கு  06.10.2022-அன்று மதுரையில் உள்ள தியாகராஜர் கலைக் கல்லூரியிலும், 07.10.2022-அன்று  திருமங்கலம் மற்றும் டி.கள்ளிக்குடி ஒன்றியம் மற்றும் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கு திரு மங்கலத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 08.10. 2022-அன்று மேலூர் ஒன்றியம் மற்றும் நகராட்சி மற்றும் பேரூ ராட்சி பகுதிகளுக்கு மேலூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியிலும்,  

10.10.2022-அன்று சேடப்பட்டி மற்றும்  டி.கல்லுப்பட்டி ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கு பேரையூரில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியிலும், 11.10.2022-அன்று உசிலம்பட்டி, செல்லம் பட்டி ஒன்றியம் மற்றும் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கு உசிலம்பட்டியில் உள்ள நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி யிலும், 12.10.2022-அன்று திருப்ப ரங்குன்றம் ஒன்றியத்தில் திருப்பரங்குன்றத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியிம் முகாம்கள் நடைபெறுகின்றன.   இம்முகாமில் அலிம்கோ நிறு வனம் மூலமாக உடல் இயக்க  குறைபாடுடைய மாற்றுத்திறனா ளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, செயற்கை கை மற்றும் செயற்கை கால்கள், தாங்கிகள், ஊன்றுகோல்கள், செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்குநவீன காதொலிக் கருவிகளும், பார்வைத் திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு மடக்கு ஊன்று கோல், பிரெய்லி கைக்கடிகாரம், பிரெய்லி சிலேட், அறிவுசார் குறைபாடுடைய மாற்றுத்திறனா ளிகளுக்கு சிறப்புசக்கர நாற்காலி, கற்றல் உபகரணங்கள் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்க ளுக்கான தினசரி பயன்படுத் தக்கூடிய உபகரணங்கள், மூத்த குடிமக்களுக்கு நடப்பதற்கான ஊன்றுகோல் சக்கர நாற்காலிகள் போன்ற உபகரணங்கள் வழங்கு வதற்கு இம்முகாமில் தேர்வு செய் யப்படுவார்கள். 

மேலும், இம்முகாமில் மதுரை மாவட்டத்தில் இதுவரை அடை யாள அட்டை பெற்றிடாத மாற்றுத் திறனாளிகளுக்குதேசிய அடை யாள அட்டை, தனித்துவ அடை யாள அட்டை(UDID) மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக வழங்கப்படும் பிற உத விகளுக்கான விண்ணப்பங்களும் பெறப்படும்.  அத்துடன், ஆவின், மத்திய கூட்டுறவு வங்கிகள், மாவட்ட தொழில் மையம், தாட்கோ மற்றும் மகளிர் திட்டம்மூலமாக வழங்கப்படும் கடன் உதவிகள் மற்றும் தொழில்திறன் மேம்பாட்டு பயிற்சிகள், வருவாய் துறை மூல மாக சமூகநல பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்குதல், முதலமைச்சரின் விரி வான காப்பீட்டு திட்டத்தின் கீழ்  பதிவுமேற்கொள்ளுதல், தொழிலா ளர் நலத்துறையின் மூலமாக பணிபுரியும் மாற்றுத்திறனாளி களுக்கு  e-Shram காப்பீட்டு அட்டைக்கான பதிவுகள் போன்ற பணிகள் இம்முகாமில் மேற் கொள்ளப்படும்.   

எனவே, மேற்காணும் தேதி களில் நடைபெறும் இம்முகாம் களில் அந்தந்த பகுதியை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்களது தேசிய மாற்றுத்திறனாளிகளுக் கான அடையாள அட்டை நகல், தனித்துவ அடையாள அட்டை  நகல் (UID), வாக்காளர் அடை யாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பாஸ்போட்அளவு புகைப்படம்-4 உடன் மாற்றுத்திற னாளிகள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள் ளார்.

சு.வெங்கடேசன்  எம்.பி.,வேண்டுகோள்

2019 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி ஒன்றிய சமூகநலன் மற்றும்  அதிகாரம் வழங்கல் துறையின் அமைச்சருக்கு கடிதம் எழுதி, நேரில் சந்தித்து “மதுரை மாவட் டத்தில் மாற்றுதிறனாளிகளுக்கான வாழ்வாதார முகாம்” நடத்துவ தற்கான ஒப்புதலை பெற்றேன். தொடர்ந்து மூன்று முறை முகாம் நடைபெறும் தேதி திட்டமிடப்பட்டு, அறிவிக்கப்பட்டும் பல்வேறு கார ணங்களால் நடைபெற முடியாத நிலை ஏற்பட்டது. இந்த முறை மிக விரிவாகவும் சிறப்பாகவும் திட்டமிடப்பட்டு மதுரை மாவட்ட ஆட்சியரால் முகாம் நடைபெறும் அட்டவனை வெளியிடப்பட்டுள்ளது. மிக்க மகிழ்ச்சி. மதுரை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் முகாமில் பங்கேற்று பயனடைய வேண்டுகிறேன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.