districts

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளி, கல்லூரிகள் உரிமத்தை ரத்து செய்க!

புதுச்சேரி,பிப்.25- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம்  முதல்வர் ரங்கசாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: புதுச்சேரியில் செயல்படும் பிரபல தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் என்ற  பெயரில் வரைமுறை இல்லாமல் வசூலித்து  வருகின்றன. இதைக் கண்டித்து எங்கள் கட்சியின் தமிழ் நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் காத்திருப்பு போராட்டம் புதுச்சேரி தலைமை செயலகம் அருகில் நடைபெற்றது. அப்போது நடந்த பேச்சுவார்த்தையில், ஒரு  நபர் நீதிபதி குழு அமைத்து கல்விக்  கட்டணம் நிர்ணயம் மற்றும் கண்காணிப் புக்கு தாங்கள் (முதலமைச்சர்) உத்தர விட்டீர்கள். ஆனாலும் அது நடைமுறைக்கு வரவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி புதுச்சேரி மக்கள் அனைத்து வகையிலும் பாதிக்கப்பட்டுள்ளன நிலையில் நீதிமன்றம் தலையிட்டு, தனியார் பள்ளிகள் எவ்வளவு கட்டணம் பெற வேண்டும் என்று வரை யறுத்து வழிகாட்டிய பிறகும் அரசு அதை இதுவரை செயல்படுத்தவில்லை. கொரோனா காலத்திலும் நேரடி வகுப்பு கள் நடத்த முடியாத சுழலிலும் முழுக் கட்டணம், கணினி ஆய்வக கட்டணம், விளை யாட்டு மைதானம் கட்டணம் என்று அனைத்து கட்டணங்களையும் கறாராக தனியார் பள்ளிகள் வசூலித்தது. ஆனால், அந்த பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு முழு ஊதியம் வழங்குவதற்கு மாறாக பாதி ஊதியம் என்ற வகையில் சொற்ப ஊதியமே வழங்கப்பட்டது. இந்த நிலை தற்போதும் நீடிக்கிறது. இந்நிலையில்தான் மார்க்சிஸ்ட் கட்சி மக்களை திரட்டி போராட்டம் நடத்திய பிறகுதான் அரசு பள்ளிகளில் சேர்க்கை நடைபெற்றது. இதில் வட்ட அதிகாரிகள், முதன்மை கல்வி அலுவலர்கள் வாய்மொழி உத்தரவிட்டும் பல பள்ளிகளில் சேர்க்கை நடைபெறாமல் உள்ளது. இதற்கு காரணம், தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக அரசு  அதிகாரிகள் செயல்படுவதும், அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்படுத் தாமல், ஆசிரியர் பற்றாக்குறை வைத்திருப்பதும்தான். உயர்கல்வி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி களின் நிலை, பள்ளிக் கல்வி நிலையை விட மிகவும் மோசமாகவே உள்ளது. பாரதிதா சன், இந்திரா காந்தி, கஸ்தூரிபாய் மகளிர் ஆகிய கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக் குறை உள்ளது. அடிப்படை உட்கட்ட மைப்பு வசதிகள், மாணவர்கள் சேர்க்கைக்கு ஏற்றார்போல் வகுப்பறைகள் இல்லை. குறிப்பாக 5 ஆயிரம் மாணவிகள் படிக்கும்  பாரதிதாசன் மகளிர் கல்லூரி இட நெருக்க டியால் ஷிப்ட் முறை அமல்படுத்தப் பட்டுள்ளது. இதனால் மாணவிகள் அதிகாலை வர வேண்டிய சூழலும், இரண்டா வது ஷிப்ட்டில் வரும் கல்லூரி மாணவிகள் மாலை 6.30 மணிக்கு மேல் தாமதமாக வீட்டிற்கு செல்ல வேண்டிய சூழ்நிலையும் உள்ளது. அவ்வாறு போகும் போது பேருந்துகளில் எந்தவித பாதுகாப்பும் இன்றி பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர். மேலும் தேர்வுத்துறை தலைவர், முதல்வர் என கல்லூரி முதல்வர் பல பொறுப்புகளை வகிக்கிறார். இதனால் எந்த பணியும் நடைபெறாமல் ஒட்டுமொத்த கல்லூரி செயல்பாடுகளும் முடங்கி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.