மதுரை, ஏப்.16- பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு சார்பில், மதுரை மூட்டா அரங்கத்தில் ஏப்ரல் 15 திங்களன்று காலை பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இதில் அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, பேராசிரியர்கள் பெ. விஜய குமார், இராஜமாணிக்கம், வழக்கறிஞர் உமர்பாரூக் ஆகியோர் கலந்து கொண் டனர்.அப்போது வெளியிடப்பட்ட அறிக் கையில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது: ஜனநாயகம் வலுவிழந்தால் தனி மனித உரிமை பறிபோகும். ஜனநாயகம் வலுவாக இருக்க வேண்டும் என்றால் கல்வி அனைவருக்கும் சமவாய்ப்புடன் கிடைக்க வேண்டும். ஆனால், நரேந்திர மோடியின் பாஜக அரசு நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் தேசியக் கல்விக் கொள்கை- 2020, ‘வளாகம் இல்லாத படிப்பு’ என்ற நிலையை உருவாக்கு கிறது.
தேசியக் கல்விக் கொள்கை தற்போது உள்ள வடிவில் முழுமையாக நடைமுறைக்கு வந்தால், பொதுநிதி யில் இயங்கும் அரசுக் கல்வி நிறு வனங்களே இல்லாமல் போகும். கல் விக்கான செலவினங்கள் குறைக்கப் பட்டு, அரசுப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் சுயநிதிப் பாடப் பிரிவு கள் மட்டுமே இருக்கும் என்ற நிலை உருவாகும். அதாவது அவை தனி யார் கல்வி நிறுவனங்கள் போல் செயல் படும். ஒன்றிய அரசின் வருமான வரித் துறை சென்னைப் பல்கலைக் கழ கத்தின் வங்கிக் கணக்கை முடக்கியதே இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டு.
ஒன்றிய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் ராணுவத்தில் பணியில் சேருவதற்காக நேஷனல் டிபன்ஸ் அகா டமியில் சேர்ந்து படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்களை அடையாளம் கண்டு வாய்ப்பளிக்க உருவாக்கப்பட்ட சைனிக் பள்ளிகள், அரசு - தனியார் கூட்டு என்ற அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இந்த சைனிக் பள்ளிகளில் மிக அதிகக் கல்விக் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்படுகின்றது. சந்தையின் பிடியில் சிக்கியுள்ள சைனிக் பள்ளி களில் படிக்கும் மாணவர்களுக்கு, நிதி நெருக்கடியில் தத்தளிக்கும் மாநில அரசுகள் கல்விக் கட்டணத்திற்கான உதவித் தொகையை வழங்கலாம் என் பதுதான் பாஜக அரசின் கீழ் உள்ள சைனிக் பள்ளிகளின் இன்றைய நிலை.
ஒன்றிய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளி களில் அனைத்திலும் சமமான கற்றல் வாய்ப்பை அனைத்து மாணவர்களுக் கும் உருவாக்காமல் சில பள்ளிகளை மட்டும் “பிஎம் ஸ்ரீ பள்ளிகள்” தனித் தகுதி தந்து அவற்றை ஆகச் சிறந்த பள்ளி கள் என்று பாஜக அரசு கூறுகிறது. ஆக ஒரு சில கேந்திரிய வித்யாலயா பள்ளி கள் மட்டுமே ஆகச் சிறந்த பள்ளிகள், மற்ற கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் சாதாரணப் பள்ளிகள் என்று சொல்ல பாஜக அரசு வெட்கப்படவில்லை.
இதே போன்று, சமூகநீதி அடிப்படை யில் அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வாய்ப்புகளை உருவாக்கி வைத்துள்ள மாநிலங்களையும் மிரட்டி, மாநில அரசுப் பள்ளிகளைப் பாகுபாட்டுடன் நடத்திட ‘பிஎம் ஸ்ரீ’ பள்ளித் திட்டத்தை ஏற்றுக் கொள்ள வற்புறுத்துகிறது பாஜக அரசு. ஆத லால் இனி மாநில அரசுகள் தங்கள் மாநில மக்களின் தேவைகளுக்கு ஏற்ப பள்ளிகளை உருவாக்குவது சமமான கற்றல் வாய்ப்பை உருவாக்குவது என் பது சாத்தியமில்லாமல் போகும். பள்ளிக் கல்வியை அடிப்படை யாகக் கொண்டு எந்தப் பட்டப் படிப்பையும் தொடர இயலாது என்ற நிலைதான் ‘நீட்’ -ஐத் தொடர்ந்து அறி முகப்படுத்தப்பட்ட ‘கியூட்’ . ‘நீட்’ மற்றும் ‘கியூட்’ சந்தையிடம் கல்வியை விற்பனைப் பொருளாக ஒப்படைக்கும் பாஜகவின் சூழ்ச்சிகரமானத் திட்டம்.
வணிக நிறுவனங்கள் தங்கள் கொள்ளை இலாபத்திற்காக மாணவர் களைப் பகடிகளாகப் பயன்படுத்தும் சூதாட்டம்தான் ‘நீட்’ மற்றும் ‘கியூட்’. தங்கள் மீது தங்களுக்கு உள்ள நம்பிக் கையைத் தாங்களே இழந்துவிடச் செய்யப்படும் சூழ்ச்சிகரமான மாண வர் சேர்க்கை நடைமுறைதான் ‘நீட்’ மற்றும் ‘கியூட்’ நடைமுறை. ‘பள்ளிப் படிப்பின் இறுதியில் பள்ளி களால் மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பிட இயலாது. தனியார் நிறு வனங்கள்தான் எந்த மாணவர் எந்தப் படிப்பில் சேரும் ஆர்வம் கொண்டுள்ள னர் என்பதைக் கண்டறிய முடியும்’ என்பது பள்ளி என்ற அமைப்பைப் பல வீனப்படுத்தும் சூழ்ச்சி. நமது மாண வர்களின் மூளைகள் அந்நிய நிறுவனங்களால் சலவை செய்யப் படும் என்னும் நிலை மாணவர்களின் சுயசிந்தனையை இழக்கச் செய்யும்.
அறிவியலுக்குத் தொடர்பில்லாத பலவற்றை அறிவியல் என்றும், வர லாற்றில் பல கோணங்களிலும் ஆரா ய்ந்து நிரூபிக்கப்படாததை வரலாறு என்றும் பாடப் புத்தகங்களில் இடம் பெறச் செய்யும் பணிகளைப் பாஜக அரசு அதிதீவிரமாகச் செய்து வருகிறது. கல்வி வளாகங்களை வணிக நோக் கில் செயல்பட அனுமதிப்பது இந்திய அரசமைப்புச் சட்டம் கூறும் கல்வி மற்றும் சமூகப் பின்தங்கலுக்கு உள் ளான சமூகத்தினருக்குக் கிடைக்க வேண்டிய சமூகநீதியின் அடிப்படையி லான இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டு வதற்காகவே.
எனவே கல்வி மாநிலப் பட்டியலில் சேர்க்கப்படும் என்றும், இந்திய மக்கள் அனைவருக்கும் கல்வியில் சமமான கற்றல் வாய்ப்புடன் கிடைத்திட அரசுப் பள்ளிகள், அரசுக் கல்லூரிகள், அரசுப் பல்கலைக்கழகங்கள் வலுப்படுத்தப்படும் என்றும் உறுதியளித்துள்ள ‘இந்தியா’ கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சி களின் வேட்பாளர்களுக்கு ‘கை’, ‘கதிர் அரிவாள்’, ‘அரிவாள் சுத்தியல் நட்சத்தி ரம்’, ‘ஏணி’, ‘உதயசூரியன்’, ‘பானை’, ‘தீப்பெட்டி’ ஆகிய சின்னங்களில் வாக் களிக்குமாறு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பி டப்பட்டு உள்ளது.