மதுரை எய்ம்ஸை உண்மையாக்குவோம்!
சு.வெங்கடேசன் எம்.பி.,பேச்சு
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மேலப்பொன்னகரம் பகுதிக்குழு முனிசிப்பாளையம் கிளையின் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் சு.வெங்கடேசன், மாமன்ற உறுப்பினர்கள் மா. ஜெயராமன், ஜெயச்சந்திரன், வை.ஜென்னி யம்மாள், வாலிபர் சங்க மாவட் டச் செயலாளர் டி.செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றனர். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற சிறுவர், சிறுமி களுக்கு பரிசுகளை வழங்கினர். அப்போது மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு. வெங்க டேசன் பேசுகையில், இந்த பொங்கல் விழாவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவது குறித்த போட்டியை நடத்தி யுள்ளனர். இது ஒரு விளை யாட்டு போட்டியாக இருந்தாலும் இன்றைக்கு தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனையின் நிலை இது தான். தமிழ்நாட்டை ஒன்றிய பாஜக அரசு புறக்கணித்து வரு கிறது. விரைவில் எய்ம்ஸ் மருத்து வமனையை உண்மையாக கட்டு வதற்காக முயற்சிகளை மேற் கொள்வோம் என்று தெரிவித்தார்.
மதுரை, ஜன.17- தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பொங்கல் விழா மற்றும் விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டன.இதில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை மாநகர் மேற்கு - 2 ஆம் பகுதிக்குழு 80 ஆவது வார்டு கிளைகள் சார்பில் பொங்கல் விழா நேதாஜி தெருவில் நடைபெற்றது. துணை மேயர் டி.நாகராஜன் தலைமை வகித்தார்.
கிளைச் செயலாளர்கள் ஏ. உடை யார், ஜி.வி. ரவிக்குமார் , பி. மணிவண்ணன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். பெரியவர்கள், சிறுவர், சிறுமியர், இளைஞர் களுக்கான விளையாட்டுப் போட்டி கள், நடனப்போட்டி , பெண்களுக் கான கோலப்போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டி களில் வெற்றி பெற்றவர்களுக்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப் பினரும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்க டேசன், மாவட்ட செயலாளர் மா. கணேசன், மாநிலக்குழு உறுப்பி னர் இரா.விஜயராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். பால சுப்பிரமணியம், பகுதிக்குழு செய லாளர் ஏ. எஸ். செந்தில்குமார், பகு திக்குழு உறுப்பினர் ஏ. வெங்க டேஸ்வரன் ஆகியோர் பரிசுகளை வழங்கி வாழ்த்திப் பேசினர். அவ னியாபுரம் ஜல்லிக்கட்டில் 28 காளை களை அடக்கி முதல் பரிசை வென்ற ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து, பாராட்டுக் கேடயம் வழங்கப்பட் டது. பி.ஏ. மாரிக்கனி நன்றி கூறி னார்.
திருவில்லிபுத்தூர்
திருவில்லிபுத்தூர் நகர் நந்த வனபட்டி தெருவில் அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சகிலா பானு தலைமை யில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. மாவட்டத் துணைத் தலைவர் ரேணுகாதேவி கலந்து கொண்டார். இடையபொட்டல் தெருவில் குழந்தைகள் ,பெண் களுக்கான விளையாட்டுப் போட்டி கள் நடைபெற்றது. கிளை தலைவர் லதா தலைமை தாங்கினார். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பொரு ளாளர் சுப்புலட்சுமி, செயலாளர் ராமலட்சுமி, நிர்வாகிகள் எஸ். முத்துலட்சுமி, ஆர்.லதா மகேஸ் வரி, ரேணுகா தேவி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
இராஜபாளையம்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் இராஜபாளை யம் எம்ஜிஆர் நகர் 2 பகுதியில் 27 ஆம் ஆண்டு தமிழர் திருநாள் மக்கள் ஒற்றுமை விளையாட்டு விழா நடைபெற்றது. பகுதி மக்கள் இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள் என ஏராளமானோர் பங்கேற்றனர். விழா இரண்டு நாள் நடைபெற்றது .முதல் நாள் பட்ட தாரி கிராமிய கலை குழுவின் கர காட்ட நிகழ்ச்சி, ஒயிலாட்டம், கோலாட்டம் ,சிறுவர்களின் நட னம் என நடைபெற்றன. இரண்டாம் நாள் சிலம்பம் ,யோகா, கவிதை, பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதில் வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.ஜெய பாரத், ராஜபாளையம் நகரத் தலை வர் ஜி.ஐயப்பன், நகர செயலாளர் எம்.செந்தமிழ் செல்வன், நகர பொருளாளர் டி.திருப்பதி, மாவட்டக்குழு உறுப்பினர் கே. செல்வி, எம்ஜிஆர் நகர் கிளை தலை வர் அருண்ராஜ் ,கிளைச் செயலா ளர் காளிமுத்து ,விழா கமிட்டி தலை வர் அருண், கமிட்டி செயலாளர் லட்சுமணன், கமிட்டி துணைச் செய லாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
செங்கமடை
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா செங்க மடையில் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் சார்பில் 35 ஆவது ஆண்டு பொங்கல் விழா போட்டி கள் நடைபெற்றது. ஆர் ஜெகதீஷ், கிளைச் செயலாளர் வீரபாண்டி, மாவட்டச் செயலாளர் தட்சிணா மூர்த்தி, தாலுகா செயலாளர் மணி கண்டன், தாலுகா தலைவர் அழகு கருப்பையா என்கிற ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் கே. ஜெய காந்தன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். இதில் சிபிஎம் தோழர் குணசேகரன் நினைவுப்பரிசு, சிபிஎம் கிளைச் செயலாளர் தோழர் ரஜினி நினைவு பரிசு வழங்கப் பட்டது. நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் சுதாகர், இரவு பாடசாலை ஆசிரியர் தர்மலிங்கம், நீண்ட நாள் நடுவராக பணியாற்றும் பூசைத் துரை ஆகியோர் கௌரவிக்கப் பட்டார்.
தேனி
தேனி மாவட்டத்தில் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் பெரியகுளம், ஜெயமங்க லம், தேவாரம் ஏரியாவில் பண் ணைப்புரம், மல்லிங்காபுரம், கம்பம், ஆண்டிபட்டி ஜம்புலி புத்தூர், போடி தாலுகா கோடாங்கி பட்டி ஆகிய சமத்துவ பொங்கல் விழா நடத்தப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் எஸ்.மீனா, மாவட்டச் செயலாளர் பி. சித்ரா, மாவட்ட துணைத் தலைவர் எஸ். வெண்மணி, மாவட்ட துணைச் செயலாளர் கே. கோமதி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.அன்ன லட்சுமி, ஆர் தனலட்சுமி, ஆர்.ஜோதிமணி, ஜெ கத்தீஜா பேகம், தாலுகா நிர்வாகிகள் சித்திகா பானு, பொன்மணி, பி.லட்சுமி, நாக லட்சுமி, ஆர்.மல்லிகா மற்றும் கிளை பெண்களும் பங்கேற்றனர்.