நாகர்கோவில், ஜூலை 17- கன்னியாகுமரி மாவட்டம் கிருஷ்ணன் கோவில் பகுதியில் தமிழ்நாடு மீன் தொழி லாளர் கூட்டமைப்பு சிஐடியு சார்பில் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டின் தீர்மான விளக்க துண்டு பிரசுர வினி யோகம் நடைபெற்றது. 60 வயதான அனைத்து மீனவர்க ளுக்கும் மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்க உத்தரவாதம் வேண்டும். மீன வர்கள் அனைவரையும் மருத் துவ காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும். புதிய மீன் பிடிதுறைமுகங்களை அமைக்க வேண்டும். பழைய துறைமுகங்களை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். கடலரிப்பை தடுத்திடும் வகையில் நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண் டும். உள்நாட்டு மீனவர்களுக்கு குளம், ஏரி, கால்வாய், அணைகளில் மீன் வளர்த்து மீன்பிடிக்கும் உரிமையை உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண் டும் என்பது உள்ளிட்ட அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட மீன வர்களின் வாழ் வாதார பாதுகாப்பு தீர்மா னங்களை ஒன்றிய, மாநில அரசு நிறை வேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஜூலை மாதம் முழுவதும் கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் துண்டு பிரசுரங்கள் வீடு வீடாக வினியோகம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் கிருஷ்ணன்கோவில் கிளை தலைவர் ஜேசுராஜன் தலைமை வகித்தார். தமிழ்நாடு மீன்பிடி தொழிற் சங்க கூட்டமைப்பு சிஐடியு மாநில பொது செயலாளர் அந்தோணி, மாவட்ட தலை வர் அலெக்சாண்டர், உள்நாட்டு மீனவர் ஒருங்கிணைப்பு மைய மாவட்ட பொது செயலாளர் வேல்முருகன் மற்றும் நிர்வா கிகள் பங்கேற்றனர்.