கோழிக்கோடு, ஜன.12- இடுக்கி பைனாவில் கே.எஸ்.யு-காங்கிரஸ் குண் டர்களால் குத்திக் கொல்லப் பட்ட எஸ்.எப்.ஐ.யைச் சேர்ந்த தீரஜ் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் கொடியேரி பாலகிருஷ் ணன் உள்ளிட்ட தலைவர் கள் அஞ்சலி செலுத்தினர். தீரஜின் உடலை கண்ணூரில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டுசெல்லும் வழியில் கோழிக்கோடு மலாப்பரம்பை அடைந்ததும் கொடியேரி உள்ளிட்ட தலை வர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். மத்தியக் குழு உறுப்பி னர்கள் ஏ.விஜயராகவன், இ.பி.ஜெயராஜன், எளமரம் கரீம், பி.கே.ஸ்ரீமதி, டி.ஒய். எப்.ஐ. மாநிலப் பொருளாளர் எஸ்.கே.சஜீஷ், மாவட்டச் செயலர் வி.வசீப், தலைவர் எல்.ஜி.லிஜீஷ், எஸ்.எப்.ஐ., மாவட்டச் செயலர் டி.அதுல், ஆர்.சித்தார்த் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.