districts

img

சு.வெங்கடேசன் எம்.பி.தொகுதி நிதியில் செவிலியர் ஓய்வறை கட்டிடம் கட்ட அடிக்கல்

மதுரை, மார்ச் 29-  மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன்  தொகுதி மேம்பாடு நிதி ரூ. 13 லட்சத்தில் செல்லூர் மற் றும் ஜெய்ஹிந்த்புரம் பகுதி களில் அடிப்படை கட்ட மைப்பு வசதிகளுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி மார்ச் 29 புதனன்று நடை பெற்றது. மதுரை மாநகராட்சி 23 ஆவது வார்டில் செல்லூர் ஆரம்ப சுகாதார மையத்தில் மகப்பேறு மருத்துவ மனை யில் செவிலியர் ஓய்வு அறை  சுமார் ரூ.5 லட்சம் மதிப்பில்  கட்ட அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி மாமன்ற உறுப்பி னர் டி. குமரவேல் தலைமை யில் நடைபெற்றது. இதில் துணை மேயர் டி. நாகராஜன், மண்டலம் - 1 தலைவர் சர வணபுவனேஷ்வரி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், சுகாதார பிரிவு அதிகாரி கள், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஜா. நரசிம்மன், வடக்கு - 1 ஆம் பகுதிக்குழு செயலா ளர் வி. கோட்டைச்சாமி உள்  ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். மாநகராட்சி 80 வது வார்டு நேதாஜி குறுக்கு தெரு  பகுதியில் மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு. வெங்க டேசன் தொகுதி மேம்பாடு நிதி ரூ 4 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கு துணை மேயர் டி.நாகராஜன் தலைமையில் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல - 4 தலைவர் வி.  சுவிதா விமல், மாமன்ற உறுப்பினர் முருகன் மற்றும் மண்டல பொறியாளர் உள்  பட பலர் கலந்துகொண்டனர்.

;