மதுரை, ஜூன் 22- மதுரை மேலூர் அருகே உள்ளது கல்லம்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் வடமுகம். இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். மூத்த மகன் மந்தையன். இவ ருக்கு ரேவதி என்ற மனைவியும் யாழினி, புகழ்மொழி என்ற இரண்டு பெண் குழந் தைகள். வடமுகத்தின் மற்ற இரு மகன் களுக்கு திருமணமாகவில்லை. உடல்நலக்குறைவால் மந்தை யனும் அவரது மனைவி ரேவதியும் இறந்துவிட்டனர். கடந்த நான்கு வரு டங்களாக பெற்றோரை இழந்து தவிக் கும் பேத்திகளை வடமுகமும்-அவரது மனைவியும் வளர்த்து வருகின்றனர். கல்லம்பட்டி கிராமத்தில் மக்களை சந்திக்க வந்திருந்த சு.வெங்டேசன் எம்.பி.யிடம் வடமுகம் மனு அளித்தார். ஒரு நிமிடம் அதிர்ந்து கண் கலங்கிய சு.வெங்கடேசன், “உடனடியாக அதி காரிகளை” தொடர்பு கொண்டு பேசி னார். பின்னர், குழந்தைகள் இருவரை யும் அரசு மையத்தில் சேர்த்து படிக்க வைக்க உடனடியாக ஏற்பாடு செய்கி றேன் என்றார். வடமுகமோ, என் பேத்தி கள் இன்னும் கொஞ்சக் காலம் எங்களு டன் இருக்கட்டும். வேறு ஏதாவது உதவி கிடைக்குமா? என்றார். கல்விக்கு ஏதா வது உதவுங்கள் என்றார். நாம் விசாரித்த வரை, முதியோர் உதவித் தொகையும் இவர்களுக்கு கிடைக்கவில்லை. இது குறித்து அதிகாரி கள் மட்டத்தில் கேட்டதற்கு, “வறுமைக் கோடு பட்டியல், பெயர் இல்லை; வட முகத்திற்கு இரண்டு மகன்கள் வேறு உள்ளனர். முதியோர் உதவித் தொகைக்கு சாத்தியம் இல்லை” என காகிதத்தில் உள்ள விளக்கத்தை மட்டும் அதிகாரி கள் தெரிவித்தனர். தாய்-தந்தையரை இழந்து தாத்தா-பாட்டிகள் அரவணைப்பில் வளரும் இரண்டு பெண் குழந்தைகளின் நலன் கருதி மதுரை ஆட்சியர் கருணை அடிப் படையில் முதியோர் உதவித் தொகை வழங்கவேண்டுமென்பதே கல்லம்பட்டி மக்களின் கோரிக்கை.