districts

img

94,700 பேருக்கு தங்க நாணயத்துடன் திருமண நிதி உதவி திட்டம் தொடக்கம்

சென்னை,ஜன.13- சென்னை மாவட்டத்தைச் சார்ந்த 2,900 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக 5 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவித் தொகையுடன் 8 கிராம்  தங்க நாணயத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட் டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்  துறை சார்பில் செயல்படுத்தப்படும் திருமண  உதவித் திட்டம் என்பது பெண்களின் உயர்கல்வியை ஊக்கப்படுத்தும் வகையி லும், பெண்களின் திருமணத்திற்காக பெண் குழந்தைகளின் பெற்றோருக்கு திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்கு தங்க நாணயம் அளிக்கும் வகையிலும், ஏழைப் பெற்றோரின் மகள், ஆதரவற்ற பெண்கள், மறுமணம் செய்து கொள்ளும் விதவையர், ஏழை  விதவையரின் மகள், கலப்புத் திருமணம்  செய்துகொள்ளும் தம்பதியர் ஆகியோர்  பயன்பெறும் வகையிலும் செயல்படுத்தப் படும் தலையாயத் திட்டமாகும். இத்திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு 8 கிராம்  தங்க நாணயத்துடன் நிதியுதவியும் வழங்கப் பட்டு வருகிறது. திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ் 2021-2022 ஆம் நிதியாண்டிற்கு 762,23 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பட்டம்-பட்டயப் படிப்பு படித்த 53,599 பயனாளிகள், பட்டதாரியல்லாத 41,101 பயனாளிகள், என மொத்தம் 94,700 பயனா ளிகள் பயனடைய உள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழனன்று(ஜன.13) சென்னை மாவட்டத் தைச் சார்ந்த 2,900 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி  வைக்கும் அடையாளமாக 5 பயனாளிக ளுக்கு திருமண நிதியுதவித் தொகையுடன் 8 கிராம் தங்க நாணயத்தை வழங்கினார். இந்தநிகழ்ச்சியில் அமைச்சர்கள் க.பொன்முடி, கீதாஜீவன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.