districts

img

‘முகவை சங்கமம்’ புத்தகத் திருவிழாவின் இலச்சினை -சின்னம் வெளியீடு

இராமநாதபுரம்,ஜன.19-   இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ் வரம் வட்டம், தங்கச்சிமடம் ஊராட்சி, பேக்  கரும்பு கிராமத்தில் உள்ள முன்னாள் குடி யரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் தேசிய நினைவகத்தில் ஜனவரி  19 அன்று  ‘முகவை சங்கமம்’என்னும் மாபெ ரும் 5ஆவது புத்தகத் திருவிழாவிற்கான இலச்சினை மற்றும் சின்னம் வெளியீடு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தகம் வாசிக்கும் நிகழ்ச்சி துவக்க விழா நடை பெற்றது.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலை வர்  ஜானி டாம் வர்கீஸ்  தலைமையேற்று புத்தகத் திருவிழாவிற்கான இலச்சினை மற்றும் சின்னம் வெளியிட்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கான புத்தகம் வாசிக் கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.  பின்னர் ஆட்சியர் தெரிவிக்கையில், இராமநாதபுரம் மாவட்டத்தில் ‘முகவை சங்கமம்”; என்னும் மாபெரும் 5ஆவது புத்த கத் திருவிழா 9.1.2023 முதல் 19.2.2023  வரை நடைபெறுகின்றது.

அதன் முன்  னோட்டமாக புத்தகத் திருவிழாவிற்கான இலச்சினை மற்றும் சின்னம் வெளியிடப் பட்டுள்ளது. இங்கு வெளியீடப்பட்டுள்ள ‘இலச்சினை” மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து வரும் தனுஷ்கோடியில் உள்ள கலங்கரை விளக்கத்தை நினைவுபடுத்தும் வகையில் புத்தகங்களால் வடிவ மைக்கப்பட்ட கலங்கரை விளக்கம் வடிவில்  அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் புத்த கத் திருவிழாவிற்கான ‘சின்னம்” என்பது கடற்பசு வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அதுவும் கடல் பகுதியை கொண்ட மாவட்  டத்தை நினைவூட்டக்கூடிய ஒன்றாகும். அது மட்டுமின்றி கடற்பசு என்பது அறி யத்தக்க பிராணியாகவும் மக்களிடம் ஒரு செல்லப்பிராணியாகவும் திகழக்கூடிய தாகும். அத்தகைய கடற்பசு அனைவரை யும் புத்தகத் திருவிழாவிற்கு வரவேற்கும் விதமாக வடிவமைக்கப்பட்ட சின்னமாக கடற்பசு பெருமை சேர்க்கின்றது. ஆக  ஒவ்வொரு அடையாளமும் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக திகழ்ந்து வரு கின்றன.தனது திறமையை வெளிப்படுத்த வும் கவிதைகள், கட்டுரைகள் என பல்வேறு படைப்புகளை உருவாக்க புத்தகம் வாசித்  தல் மிகப்பயனுள்ளதாக இருக்கும் என்று  தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ம.காமாட்சி கணேசன் ,வான் தமிழ் புத்தக கண்காட்சி மேலாளர் மரு. இளம்பரிதி, தங்கச்சிமடம் ஊராட்சி மன்ற  தலைவர் குயின்மேரி மற்றும் அரசு அலு வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.