கடமலைக்குண்டு, டிச.29- தேனி மாவட்டம் ஆண் டிப்பட்டி தாலுகா கோம் பைத்தொழு கிராமத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சின்னசுருளி அருவி உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் 50 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து விழு கிறது. இந்த அருவிக்கு தமி ழகத்தில் பல்வேறு பகுதி களில் இருந்தும் தினமும் ஏரா ளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற் போது பள்ளிகளுக்கு அரை யாண்டு விடுமுறை விடப் பட்டுள்ளதால் குடும்பத்து டன் சின்னசுருளி அருவிக்கு வருகின்றனர். சின்னசுருளி அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் இரண்டு இடங்களில் நுழைவுக்கட்ட ணம் வசூலிக்கப்படுகிறது. மேகமலை ஊராட்சி நிர்வா கம் சார்பில் கோம்பைத் தொழு கிராமத்தில் நுழைவு கட்டணம் 30 முதல் 100 ரூபாய் வரை வாகனங்களுக்கு வசூ லிக்கப்படுகிறது. அங்கி ருந்து அருவிக்கு செல்லும் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் வனத்துறை சார் பில் ஒரு நபருக்கு 30 ரூபாய் நுழைவுக்கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இரண்டு இடங்களில் நுழைவுக்கட்ட ணம் வசூலித்தாலும் அதற்கு ஏற்றாற் போல அருவி பகு தியில் எந்தவிதமான அடிப் படை வசதிகளும் செய்து தர வில்லை என்று சுற்றுலா பய ணிகள் புகார் கூறியுள்ளனர். அருவிக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ள தால் அருவிக்கு ஒருகிலோ மீட்டர் தூரத்திற்கு முன்ன தாகவே கார்களை நிறுத்தி விட்டு நடந்து செல்லும் நிலை உள்ளது. வாகனங்கள் நிறுத்துவதற்கு போதுமான இடம் ஒதுக்கப்படவில்லை. அருவி பகுதியில் கண்கா ணிப்பு இல்லாததால் பெண் களுக்கு பாதுகாப்பற்ற நிலையே உள்ளதாகவும் புகார் கூறுகின்றனர். எந்த விதமான அடிப்படை வசதி யும் செய்யாமல் எதற்காக இரண்டு இடங்களில் நுழை வுக்கட்டணம் வசூலிக்கப்படு கிறது? என்று சுற்றுலா பய ணிகள் கேள்வி எழுப்பி யுள்ளனர். எனவே ஆயி ரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் சின்னசுருளி அரு வியில் அடிப்படை வசதி களை செய்து, நுழைவுக்கட் டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.