மதுரை மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் மூலம் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளை நிதி-மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் டிசம்பர் 8 அன்று துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், துணை மேயர் நாகராஜன், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.கார்த்திகா ஆகியோர் பங்கேற்றனர்.