தூத்துக்குடி,மார்ச் 26 கோவில்பட்டி புதுரோடு பெத்தேல் வளாகத்தில் ஒய்.எம்.சி.ஏ சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப் பட்டது. விழாவிற்கு ஒய்.எம்.சி.ஏ தலைவர் ஆர்ம்ஸ்டி ராங் தலைமை வகித்தார். கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி மற்றும் பசு வந்தனை காவல் ஆய்வாளர் சித்ரகலாஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி மகளிர் முன் னேற்றம் மற்றும் பாதுகாப்பு குறித்து சிறப்புரை ஆற்றி னார்கள். நகர்மன்ற உறுப்பினர்கள் ஏஞ்சலா , உலக ராணி, கலைமாமணி விருது பெற்ற ஆசிரியர் அமல புஷ்பம், கோவில்பட்டி இன்னர் வீல் கிளப் தலைவர் வழக்கறிஞர் ஜெயஶ்ரீ கிறிஸ்டோபர், ஒய்.எம்.சி.ஏ செயற் குழு உறுப்பினர்கள் லெஸ்லின் சாந்தகுமார், ரூபன் குருபிரசாத், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.